CHENNAI

பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ திட்டம்... அறிக்கைக்கான ஒப்பந்தம் கையெழுத்து!

மெட்ரோ சென்னையை அடுத்த பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் விமான நிலைய வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் M/s Aarvee Associates, Architects, Engineers & Consultants Pvt நிறுவனத்திற்கு ரூ.1.74 கோடி மதிப்பில் கையெழுத்தானது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) M/s Aarvee Associates, Architects, Engineers & Consultants Pvt நிறுவனத்திற்கு 11.06.2024 அன்று வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 43.63 கி.மீ நீளம் உள்ள இந்த வழித்தடம் 19 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மண் ஆய்வு மற்றும் நிலப்பரப்பு ஆய்வுக்காக 100 க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தில் ஆழ்துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளபடவுள்ளது. நவம்பர் 2024 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / சென்னை / பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ திட்டம்... அறிக்கைக்கான ஒப்பந்தம் கையெழுத்து! பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ திட்டம்... அறிக்கைக்கான ஒப்பந்தம் கையெழுத்து! மெட்ரோ 43.63 கி.மீ நீளம் உள்ள இந்த வழித்தடம் 19 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Chennai,Tamil Nadu Last Updated : July 26, 2024, 9:18 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P தொடர்புடைய செய்திகள் சென்னையை அடுத்த பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் விமான நிலைய வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் M/s Aarvee Associates, Architects, Engineers & Consultants Pvt நிறுவனத்திற்கு ரூ.1.74 கோடி மதிப்பில் கையெழுத்தானது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) M/s Aarvee Associates, Architects, Engineers & Consultants Pvt நிறுவனத்திற்கு 11.06.2024 அன்று வழங்கப்பட்டது. விளம்பரம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 43.63 கி.மீ நீளம் உள்ள இந்த வழித்தடம் 19 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட உள்ளது. விளம்பரம் மண் ஆய்வு மற்றும் நிலப்பரப்பு ஆய்வுக்காக 100 க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தில் ஆழ்துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளபடவுள்ளது. நவம்பர் 2024 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் படிங்க: NEET UG Result 2024 : நீட் தேர்வு திருத்தப்பட்ட முடிவுகள் வெளியீடு… விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Metro Rail , Tamilnadu First Published : July 26, 2024, 9:18 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.