பச்சிளம் குழந்தையை கொன்ற தந்தை சென்னை வியாசர்பாடியில் மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் பிறந்து ஒன்பது நாட்களேயான குழந்தையை கத்திரிக்கோலால் குத்தி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெருவில் வசித்து வருபவர் 38 வயதான ராஜ்குமார் : இவரது மனைவி விஜயலட்சுமி. கூலி வேலை செய்து வரும் ராஜ்குமாருக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவது பிரசவத்திற்காக விஜயலட்சுமி கடந்த 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கடும் விரக்தியில் இருந்துள்ளார் ராஜ்குமார் கடந்த நான்காம் தேதி மருத்துவமனையில் இருந்து டிச்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஏழாம் தேதி குழந்தைக் கு வயிற்றில் காயம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி தம்பதி இருவரும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். வயிற்றில் பலத்த ரத்த காயங்களுடன் குழந்தை அங்கு அனுமதிக்கப்பட்டது. குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகம் அடைந்தனர். உடனே அதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வடக்கு மண்டல மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தையின் காயத்தை ஆராய்ந்தனர். அப்போது, மூன்று இடத்தில் குழந்தைக்கு வயிற்றில் தையல்கள் போடப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வந்தது. குழந்தையின் வயிற்றில் யாரோ கூர்மையான ஆயுதத்தால் குத்தியது போல் இருந்ததால் உடனே குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலகர்கள் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், கடந்த பத்தாம் தேதி சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவர்கள் மற்றும் போலீசாருக்கு குழந்தை இறப்பில் சந்தேகம் இருந்ததால் குழந்தையின் உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு அறிக்கை புதன்கிழமை வந்த நிலையில், அதில், கூர்மையான ஆயுதம் வைத்து குழந்தையை வயிற்றில் குத்தியதற்கான அடையாளங்கள் உள்ளன குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு போலீசார்அதிர்ந்து போயினர். குழந்தையின் தந்தையான ராஜ்குமாரைப் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது குழந்தை குத்தி கொல்லப்பட்ட தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்ததாக ராஜ்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். அடுத்தடுத்து 3 குழந்தைகள் பெண் குழந்தையாக பிறந்ததால், அதிர்ச்சியடைந்த தந்தை பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- August 4, 2024
-
- August 3, 2024
-
- July 29, 2024
Featured News
Latest From This Week
இன்று 5 மணிநேரம் பவர்கட்... முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு
CHENNAI
- by Sarkai Info
- July 5, 2024
பிரியாணியில் நெளிந்த புழுக்கள்.. ஷாக் கொடுத்த பிரபல உணவகம்!
CHENNAI
- by Sarkai Info
- June 23, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.