CHENNAI

கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய 11 வயது சிறுவன் பலி?

11 வயது சிறுவன் சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதில் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகாரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் பணி நிமித்தமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னைக்கு புலம்பெயர்ந்தார். கிண்டியில் பணியாற்றும் அவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை ராஜேஷ் குமாரின் 3-ஆவது மகனான யுவராஜூக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. 2 நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், வியாழக்கிழமை இரவு உடல்நிலை மோசமானதால், கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், அங்கு செல்லும் வழியிலேயே 11 வயது சிறுவனான யுவராஜ் உயிரிழந்தார். இதே போல, ராஜேஷ்குமாரின் 4-ஆவது குழந்தையான மீராவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குடிநீர் மாதிரியை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பினர். இச்சம்பவத்துக்கு தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில், குடிநீரில் எந்தக் கழிவுநீரும் கலக்கவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையும் படிங்க: சொர்க்கத்தில் இடம் வேண்டுமா? சதுர மீட்டர் 100 டாலர்தான்!? - பிளாட் போட்டு விற்கும் தேவாலயத்தால் அதிர்ச்சி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் எங்கே உணவு அருந்தினார்கள் என்கிற தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குடிநீரில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சைதாப்பேட்டையில் பாதிப்புக்குள்ளான பகுதியில் 182 வீடுகள் இருப்பதாகவும் அங்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழ் செய்திகள் / சென்னை / சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழப்பா? - அமைச்சர் விளக்கம்! சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழப்பா? - அமைச்சர் விளக்கம்! 11 வயது சிறுவன் தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளார் படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Chennai,Tamil Nadu Last Updated : June 29, 2024, 8:51 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P தொடர்புடைய செய்திகள் சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதில் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகாரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் பணி நிமித்தமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னைக்கு புலம்பெயர்ந்தார். கிண்டியில் பணியாற்றும் அவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை ராஜேஷ் குமாரின் 3-ஆவது மகனான யுவராஜூக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. 2 நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், வியாழக்கிழமை இரவு உடல்நிலை மோசமானதால், கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், அங்கு செல்லும் வழியிலேயே 11 வயது சிறுவனான யுவராஜ் உயிரிழந்தார். விளம்பரம் இதே போல, ராஜேஷ்குமாரின் 4-ஆவது குழந்தையான மீராவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குடிநீர் மாதிரியை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பினர். இச்சம்பவத்துக்கு தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில், குடிநீரில் எந்தக் கழிவுநீரும் கலக்கவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விளம்பரம் இதையும் படிங்க: சொர்க்கத்தில் இடம் வேண்டுமா? சதுர மீட்டர் 100 டாலர்தான்!? - பிளாட் போட்டு விற்கும் தேவாலயத்தால் அதிர்ச்சி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் எங்கே உணவு அருந்தினார்கள் என்கிற தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குடிநீரில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சைதாப்பேட்டையில் பாதிப்புக்குள்ளான பகுதியில் 182 வீடுகள் இருப்பதாகவும் அங்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Drinking water First Published : June 29, 2024, 8:51 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.