CHENNAI

வேளச்சேரி டூ செயிண்ட் தாமஸ் மவுன்ட் பறக்கும் ரயில் சேவை எப்போது?

வேளச்சேரி - செயிண்ட் தாமஸ் மவுன்ட் பறக்கும் ரயில் சென்னையில் பறக்கும் ரயில் திட்டம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பேருந்து, மெட்ரோ ரயில் உள்ளிட்ட வசதிகள் இருந்தாலும் ஏராளமானவர்கள் பயணிக்கக்கூடிய ஒன்றாக இந்த பறக்கும் ரயில் உள்ளது. வேலைக்குச் செல்வோர் தொடங்கி, பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் வரை தினசரி இதனை நம்பி மட்டுமே பயணிக்கும் ஏராளமானவர்களும் உண்டு. பறக்கும் ரயில் சேவையைப் பொறுத்தவரை, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை சுமார் 19 கிலோமீட்டருக்கு ரயில் இயக்கப்படுகிறது. வேளச்சேரியிலிருந்து - செயின்ட் தாமஸ் மவுன்ட் வரையிலான 5 கிலோ மீட்டருக்கு இதனை நீட்டிக்க திட்டமிட்டு 2007ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளும் நடைபெற்றன. இதற்காக இந்த வழித்தடத்தில் ஆதம்பாக்கம் மற்றும் புழுதிவாக்கம் என இரு ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வேளச்சேரி - செயிண்ட் தாமஸ் மவுன்ட் இடையேயான பணிகள் இதுவரை முடிந்தபாடில்லை. 2013ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்திருக்க வேண்டிய இந்தப் பணிகள், ரயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சனை காரணமாக பல ஆண்டுகளாக காலதாமதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் பணிகள் முடிவடைந்து ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை பணிகள் முழுமை பெறவில்லை. இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்பட்டால், தாம்பரம் மார்க்கத்தில் இருந்து கிண்டி செல்லாமல், வேளச்சேரி, மயிலாப்பூர் வழியாக, கடற்கரை ரயில் நிலையம் செல்ல முடியும் என்கின்றனர் பொதுமக்கள். இதையும் படிக்க: 2 நாளுக்கு ஒருமுறை தான் தண்ணீர் விநியோகம்… சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு! ஆரம்ப கட்டத்தில், இந்த திட்டத்திற்கான செலவாக சுமார் 495 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது காலதாமதமாகி கட்டுமான பொருட்கள் விலை ஏறியுள்ளதால், கடந்த ஆண்டு கணக்குப்படி சுமார் 734 கோடி ரூபாய்க்கு இதன் செலவினம் அதிகரித்துள்ளது. செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் அண்மையில் தண்டவாளம் அமைப்பதற்கான உயர்மட்ட மேம்பாலம் திடீரென சரிந்து விழுந்தது. அதன் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நடப்பாண்டு இறுதிக்குள் முடிவடைந்து ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது! None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.