CHENNAI

பெண்ணை முட்டி தரதரவென இழுத்துச் சென்ற எருமை மாடு!

பெண்ணை தாக்கிய மாடு சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு துரத்தி துரத்தி முட்டியதில் படுகாயம் அடைந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவொற்றியூர் கிராமத்து தெரு பகுதியில் சாலையில் நடந்து சென்ற கூலித்தொழிலாளியின் மனைவியான மதுமதி என்பவரை எருமை மாடு கொம்பால் முட்டியது. மேலும் அந்த தெரு முழுவதும் அப்பெண்ணை மாடு தரதரவென இழுத்துச் சென்றது. இந்நிகழ்வின் பதறவைக்கும் சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், எருமை மாட்டை விரட்ட முற்பட்டனர். ஆனால், ஆக்ரோஷமாக இருந்த எருமை மாடு, பொதுமக்களை விரட்டத் தொடங்கியது. மேலும் அப்பகுதியில் இருந்த இருசக்கர வாகனங்களையும் எருமை மாடு சேதப்படுத்தியது. மாடு முட்டியதில் கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்ட மதுமதி, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இடது தொடையில் 20-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை முடிந்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுமதியை காப்பாற்றிய அப்பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி, மாடு ஆக்ரோஷமாக இருந்தது குறித்து விவரித்தார். மாடு தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண்ணிற்கு 2 குழந்தைகள் உள்ளன. பெண்ணை கொடூரமாக தாக்கிய எருமை மாட்டின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவொற்றியூரில் மாடுகள் சாலையில் சுற்றித் திரிவது அதிகரித்து விட்டதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாடுகளால் பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் செய்திகள் / சென்னை / பெண்ணை முட்டி தரதரவென இழுத்துச் சென்ற எருமை மாடு... சென்னையில் அதிர்ச்சி சம்பவம் பெண்ணை முட்டி தரதரவென இழுத்துச் சென்ற எருமை மாடு... சென்னையில் அதிர்ச்சி சம்பவம் பெண்ணை தாக்கிய மாடு Cow attack viral video | திருவொற்றியூர் கிராமத்து தெரு பகுதியில் சாலையில் நடந்து சென்ற கூலித்தொழிலாளியின் மனைவியான மதுமதி என்பவரை எருமை மாடு கொம்பால் முட்டியது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : June 17, 2024, 4:18 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vinalin தொடர்புடைய செய்திகள் சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு துரத்தி துரத்தி முட்டியதில் படுகாயம் அடைந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவொற்றியூர் கிராமத்து தெரு பகுதியில் சாலையில் நடந்து சென்ற கூலித்தொழிலாளியின் மனைவியான மதுமதி என்பவரை எருமை மாடு கொம்பால் முட்டியது. மேலும் அந்த தெரு முழுவதும் அப்பெண்ணை மாடு தரதரவென இழுத்துச் சென்றது. இந்நிகழ்வின் பதறவைக்கும் சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், எருமை மாட்டை விரட்ட முற்பட்டனர். ஆனால், ஆக்ரோஷமாக இருந்த எருமை மாடு, பொதுமக்களை விரட்டத் தொடங்கியது. மேலும் அப்பகுதியில் இருந்த இருசக்கர வாகனங்களையும் எருமை மாடு சேதப்படுத்தியது. விளம்பரம் மாடு முட்டியதில் கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்ட மதுமதி, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இடது தொடையில் 20-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை முடிந்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுமதியை காப்பாற்றிய அப்பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி, மாடு ஆக்ரோஷமாக இருந்தது குறித்து விவரித்தார். மாடு தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண்ணிற்கு 2 குழந்தைகள் உள்ளன. பெண்ணை கொடூரமாக தாக்கிய எருமை மாட்டின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விளம்பரம் திருவொற்றியூரில் மாடுகள் சாலையில் சுற்றித் திரிவது அதிகரித்து விட்டதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாடுகளால் பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai , Cow , Tamil News , Thiruvotriyur , Viral News , Viral Video First Published : June 17, 2024, 4:18 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.