பொங்கல் பரிசு கோவையில் பொங்கல் பரிசு தொகையை பொதுமக்களுக்கு வழங்காமல் பணத்துடன் தலைமறைவான ரேசன் கடை ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக, ரேசன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பணம் அடங்கிய பரிசு தொகுப்பை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் கடந்த 10ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 11 லட்சத்து 4 ஆயிரத்து 942 ரேஷன் கார்டுதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட ரேசன் கடை ஊழியர்களிடம் பணம் வழங்கப்பட்டு இருந்தது. இதில், 10 லட்சத்து 31 ஆயிரத்து 876 கார்டுதாரர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 73 ஆயிரத்து 66 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில், அந்தந்த ரேஷன் கடை பொறுப்பாளர்கள் மீதமுள்ள தொகையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனால், சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அமுதம் அங்காடி ரேஷன் கடை ஊழியர் மதியரசு பொங்கல் பரிசு தொகையை திரும்ப செலுத்தாதது தெரியவந்தது. இது குறித்து அமுதம் அங்காடியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது மொத்தம் உள்ள 841 குடும்ப அட்டைதாரர்களில் 719 பேருக்கு முறையாக பணத்தை கொடுத்து இருப்பதும், 122 பேருக்கு பொங்கல் பரிசு தொகை வழங்காமல் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை திரும்ப ஒப்படைக்குமாறு அதிகாரிகள் தெரிவித்த நிலையில், ஊழியர் மதியரசு பணத்துடன் தலைமறைவானார். இது குறித்து கடை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மதியரசு மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை சுமார் 25 சதவீதத்துக்கும் மேலான குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத நிலையில், தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளும் வரை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார். பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் ! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/ZkqTcRT8Bh இந்நிலையில், கோவையில் பொங்கல் பரிசு தொகையான ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாயுடன் ரேசன் கடை ஊழியர் தலைமறைவாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. None
Popular Tags:
Share This Post:
பாட்டி கால பாரம்பரிய வெண்ணெய் கடையும் மத்து... கலை வடிவில் கிளி மத்தாக்கிய பி.டெக் பெண்...
August 13, 2024சிறகடிக்கும் 100 வகையான வண்ணத்துப்பூச்சி... கோவையில் பொதுமக்கள் கண்டுகளிக்க சூப்பர் ஸ்பாட்...
August 11, 2024What’s New
Spotlight
Today’s Hot
பி.ஆர்.நடராஜன் கோவையில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி சாத்தியமா?
- By Sarkai Info
- February 15, 2024
விளம்பரம் பார்த்தால் பணம் வருமா? My V3 Ads நிறுவனர் அதிரடி கைது
- By Sarkai Info
- February 11, 2024
Featured News
சாலை விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிய கனிமொழி எம்.பி
- By Sarkai Info
- February 11, 2024
My V3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் அதிரடி கைது!
- By Sarkai Info
- February 11, 2024
எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.பி.ஆ.ராசா சவால்..!
- By Sarkai Info
- February 9, 2024
Latest From This Week
இன்ஸ்டாவில் வீடியோ... ஓட்டுநர் ஷர்மிளா மீது பாய்ந்தது வழக்கு
COIMBATORE
- by Sarkai Info
- February 7, 2024
விளம்பரம் பார்த்தால் வருமானமா? MY V3 ADS நிறுவனம் மீது புகார்
COIMBATORE
- by Sarkai Info
- February 5, 2024
ஒரு நாள் ட்ரிப் போதும்: கோவையின் பெஸ்ட் இயற்கை எழில் மிக்க இடங்கள்
COIMBATORE
- by Sarkai Info
- February 3, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Popular News
Top Picks
செல்போனில் ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்? - உஷார்!
- January 14, 2024
ஆன்லைனில் ஷூ ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
- January 2, 2024