COIMBATORE

விளம்பரம் பார்த்தால் பணம் வருமா? My V3 Ads நிறுவனர் அதிரடி கைது

கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் My V3 Ads என்ற செயலியை நடத்தி வருபவர் சக்தி ஆனந்தன். இந்த செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே செல்போனில் விளம்பரம் பார்ப்பதாலும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பெற முடியும் என்ற விளம்பரம் மூலம் வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்த்துள்ளார். இதில் இணைய, 360 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி ஏராளமானோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் செயல்படுத்தி வருகிறது. இதை நம்பி, தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில், எம்.எல்.எம். முறையில் பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வருவதாகவும், மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகள் வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 19ஆம் தேதி சக்தி ஆனந்தன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். இதனால் கடந்த 29ஆம் தேதி கோவை நீலாம்பூர் பைபாஸ் சாலையில் ஏராளமான My V3 Ads உறுப்பினர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவரை My V3 Ads செயலி குறித்தும், அதன் உரிமையாளர் சக்தி ஆனந்தன் குறித்தும் அறிந்திராத பலர், இந்த கூட்டத்தை பார்த்து பிரமித்தனர். அதன்பின்னர், சக்தி ஆனந்தன் வெளியிட்ட வீடியோவில், தன்னெழுச்சியாக மக்கள் கூடியதாகவும், தானே அந்த பகுதியை தேர்வு செய்ததாகவும் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இந்த நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சக்தி ஆனந்தன் மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. மாஸ் கட்ட நினைத்து இப்படி சிக்கலில் மாட்டிக் கொண்டோமே என சக்தி ஆனந்தன் நினைத்தாரோ என்னவோ, பிப்ரவரி 5ஆம் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பிறகு பேட்டியளித்த அவர், அந்த கூட்டத்தை நான் கூட்டவே இல்லை என ஒரே போடாக போட்டார். சக்தி ஆனந்தன் ஏற்கனவே V3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் இதேபோல் பணம் வசூலித்து மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட சிலர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதனிடையே, My V3 Ads நிறுவனம் குறித்து அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சக்தி ஆனந்தன், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அபோது 200க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்த அவர், கோவை மாநகர ஆணையரை சந்தித்து மனு அளித்த பிறகே கலைந்து செல்வோம் என்றும் பிடிவாதம் பிடித்தபடி, ஆதரவாளர்களுடன் இணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சக்தி ஆனந்தன் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், My V3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்தன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார், அவரை இரண்டாவது விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, அவரை நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சக்தி ஆனந்தன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, சக்தி ஆனந்தனுடன் கைது செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் நள்ளிரவில் விடுவிக்கப்பட்டனர். அப்போது, My V3 Ads செயலி பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு செயல்படவில்லை. இதனால், செயலி முடக்கப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.