COIMBATORE

தபெதிக நபர்கள் தாக்குதல் நடத்தவில்லை - ஈஷா மையம் விளக்கம்

ஈஷா மையம் கோவை மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, சிலர் அனுமதியின்றி அத்துமீறி உள்ளே நுழையவும், அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சி செய்யப்பட்டதாக ஈஷா மையம் குற்றம்சாட்டியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஈஷா வளாகத்திற்குள் நுழைய முயற்சித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது ஈஷா தன்னார்வலர்கள் அல்லது ஈஷா ஆதரவாளர்கள் யாரும் தாக்குதல் நடத்தவில்லை. ஈஷா மீது அவர்கள் வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்று ஈஷா மையம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஈஷா மையம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில், கோவை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மின் மயான கட்டுமானப் பணி நடக்கும் பகுதிக்குள் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்தனர். இந்த தகவல் தெரிந்து அங்கு வந்த உள்ளூர் பழங்குடி மக்களும், காவல் துறையினரும் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அப்போது யார் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை. மேலும், ஈஷாவால் கட்டப்பட்டு வரும் மின் மயானம் முழுக்க முழுக்க ஈஷாவிற்கு சொந்தமான பட்டா நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது. பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்படுவதாக சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அதேபோல், குடியிருப்பு பகுதியில் இருந்து 90 மீட்டர் தொலைவிற்குள் மயானம் அமைப்பது தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து சட்டத்திற்கு எதிரானது என குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த சட்ட விதி திறந்தவெளி சுடுகாட்டிற்கு தான் பொருந்தும். மின் மயானம் அமைப்பதற்கு இவ்விதி பொருந்தாது. ஈஷாவை சுற்றியுள்ள 4 பழங்குடியின கிராமங்கள் உட்பட 6 கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையிலேயே நவீன எரிவாயு மயானம் கட்டப்பட்டு வருகிறது. ஈஷாவின் நவீன மின் மயானத்திற்கு பஞ்சாயத்து அனுமதி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மயானம் நிறுவுவதற்கான ஒப்புதல் (Consent to Establish) பெற்ற பிறகு தான் கட்டமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக சிவஞானம், சுப்ரமணியன், காமராஜ் ஆகியோர் மயானக் கட்டுமானத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஈஷா சார்பில் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மயான கட்டுமானப் பகுதிக்குள் தொடர்பில்லாத நபர்கள் யாரும் உள்ளே நுழைய கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறி தான் தபெதிக அமைப்பினர் ஈஷாவிற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.