PUDUKKOTTAI

இந்த வாரம் வெயில் சுட்டெரிக்கும்... வானிலை ஆய்வு மையம் கொடுத்த வெதர் அப்டேட்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வாரம் வெயில் சுட்டெரிக்கும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் பதிவாகும் வெப்பத்தின் அளவிற்கு இணையாக இம்மாதம் ( செப்டம்பர் ) வெயிலின் தாக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. தொடர்ந்து காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுவதாலும், மேற்கு திசையில் இருந்து வீசும் சுரை காற்று வெப்பமாக இருப்பதன் காரணமாகவும் வெயில் சுட்டெரித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதனால் பகல் நேரங்களில் அனல் காற்று அதிகமாக வீசி வருவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றார்கள். மேலும் வயதான முதியோர்களும், பெண்களும் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால், தற்போது மக்கள் நடமாட்டமும் வெளியில் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த வாரம் முழுவதும் 26 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களிலும் புதுக்கோட்டை மாவட்டமானது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது, மே மாத வெயிலுக்கு இணையாக வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதையும் வாசிக்க: Gold Rate Today: மீண்டும் எகிறும் தங்கம் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? இதனால் மாவட்டத்தில் வறண்ட சூழ்நிலையும் நிலவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே கணப்படும் என்று வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / இந்த வாரம் வெயில் சுட்டெரிக்கும்... வானிலை ஆய்வு மையம் கொடுத்த வெதர் அப்டேட்... இந்த வாரம் வெயில் சுட்டெரிக்கும்... வானிலை ஆய்வு மையம் கொடுத்த வெதர் அப்டேட்... புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வாரம் வெயில் சுட்டெரிக்கும் weather update| புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த வாரம் முழுவதும் 26 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Tamil Nadu Last Updated : September 23, 2024, 1:54 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் பதிவாகும் வெப்பத்தின் அளவிற்கு இணையாக இம்மாதம் ( செப்டம்பர் ) வெயிலின் தாக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. தொடர்ந்து காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுவதாலும், மேற்கு திசையில் இருந்து வீசும் சுரை காற்று வெப்பமாக இருப்பதன் காரணமாகவும் வெயில் சுட்டெரித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதனால் பகல் நேரங்களில் அனல் காற்று அதிகமாக வீசி வருவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றார்கள். மேலும் வயதான முதியோர்களும், பெண்களும் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால், தற்போது மக்கள் நடமாட்டமும் வெளியில் குறைந்து கொண்டே வருகிறது. விளம்பரம் இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த வாரம் முழுவதும் 26 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களிலும் புதுக்கோட்டை மாவட்டமானது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது, மே மாத வெயிலுக்கு இணையாக வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதையும் வாசிக்க: Gold Rate Today: மீண்டும் எகிறும் தங்கம் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? விளம்பரம் இதனால் மாவட்டத்தில் வறண்ட சூழ்நிலையும் நிலவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே கணப்படும் என்று வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Pudukkottai , Weather Update First Published : September 23, 2024, 1:54 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.