PUDUKKOTTAI

இனி மாதாந்தோறும் வட்டி கிடைக்குமா...? தபால் துறையின் இந்த திட்டம் பற்றி தெரிஞ்சிக்கோங்க...

தபால் துறையின் மாத வருமான திட்டம் இந்திய அஞ்சல் துறை மூலம் மக்களுக்கு பலன் தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது அஞ்சல் துறையில் பல்வேறு திட்டங்கள் மூலம் முதலீடு செய்து குறிப்பிட்ட ஆண்டுக்கு பிறகு வட்டியுடன் கூடிய தொகையை பெற்று கொள்ள முடியும். அந்த வகையில் இந்திய அஞ்சல் துறை மூலம் செயல்படுத்தப்படும் மாதாந்திர வருமான திட்டம் பற்றி புதுக்கோட்டை மாவட்டத் தலைமை அஞ்சல் அதிகாரி லலிதா விளக்கம் அளித்துள்ளார். தேசிய சேமிப்பு மாதாந்திர வருமான கணக்கு என்பது மாதாமாதம் வட்டி தரக்கூடிய சேமிப்புத் திட்டம் ஆகும். 7.4% வட்டி தரப்படும் இந்தத் திட்டத்தில் ஒருவர் அதிகபட்சமாக 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதுவே கூட்டுக்கணக்காக இருந்தால் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள். ஒருவேளை இந்தத் திட்டத்தில் இருந்து முன்கூட்டியே நீங்கள் வெளியேற நினைத்தால் முதல் ஓராண்டிற்கு பணத்தை எடுக்க முடியாது. ஓராண்டிற்கு பின்னரோ, மூன்று ஆண்டிற்கு முன்னரோ கணக்கை முடித்தால் உங்கள் முதலீட்டில் 2% சதவீதம் பிடித்தம் செய்யப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வெளியேற நினைத்தால் 1% பிடித்தம் செய்யப்படும். எவ்வாறாயினும், இந்தத் திட்டத்தில் நாம் பெற்ற வட்டித்தொகையோடு ஒப்பிடும் போது முதலீட்டில் பிடித்தம் செய்யப்படும் தொகை குறைவாகவே இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் மொத்தம் 37,000 ரூபாய் வட்டியாக உங்களுக்கு கிடைக்கும். அதுவே இந்தத் திட்டத்தின் உச்சபட்ச முதலீடான 15 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5,55,000 ரூபாய் வட்டியாக கிடைக்கும். இந்த திட்டத்தில் சேருவதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை பான் கார்டு 2 ஃபோட்டோ அத்துடன் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும். மேலும் கிளை அலுவலகம் முதல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் வரை இந்த திட்டத்தில் சேர முடியும். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.