NILGIRIS

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரியில் கனமழை நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பொழிந்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மரம் விழுந்துள்ளது. மேலும் குடியிருப்புப் பகுதிகளில் மண் சரிவும் ஏற்படுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஒரு வார காலமாக நீலகிரி மாவட்டத்தில் அதிக மழை பொழிந்து வருவதால் மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்துவரும் அதிக மழை காரணமாக விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். நேற்றைய தினம் பெய்த அதிக மழை பொழிவினால் எல்லநள்ளி அருகே உள்ள கேத்தி பகுதியில் காவல் நிலையத்தின் மீது ராட்சத மரம் விழுந்ததில் காவல் நிலைய கட்டிடம் மற்றும் சாலையைத் தாண்டி உள்ள ஒரு கடையின் முன் பகுதி பாதிப்படைந்துள்ளது. இதையும் படிங்க: சுகர் சர்ரென குறையணுமா… மாதத்தில் 2 டைம்ஸ் நண்டு சாப்பிடுங்க… இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாகச் சாலையில் விழுந்த மரத்தினை அகற்றி போக்குவரத்தைச் சீர் செய்தனர். மேலும் நீலகிரியில் பொழியும் அதிக மழை காரணமாக உதகையின் முக்கிய சுற்றுலாத்தலமான படகு இல்லத்தில் தற்காலிகமாகப் படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி நகரப் பகுதிகளில் மழை பொழிந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றிக் காணப்படுகிறது. மேலும் உள்ளூர் மக்களும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர். இன்றும் நீலகிரி மாவட்டத்தில் அதிக கன மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / பள்ளிகளுக்கு இன்று விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு நீலகிரியில் கனமழை கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : July 26, 2024, 8:03 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பொழிந்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மரம் விழுந்துள்ளது. மேலும் குடியிருப்புப் பகுதிகளில் மண் சரிவும் ஏற்படுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஒரு வார காலமாக நீலகிரி மாவட்டத்தில் அதிக மழை பொழிந்து வருவதால் மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்துவரும் அதிக மழை காரணமாக விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். நேற்றைய தினம் பெய்த அதிக மழை பொழிவினால் எல்லநள்ளி அருகே உள்ள கேத்தி பகுதியில் காவல் நிலையத்தின் மீது ராட்சத மரம் விழுந்ததில் காவல் நிலைய கட்டிடம் மற்றும் சாலையைத் தாண்டி உள்ள ஒரு கடையின் முன் பகுதி பாதிப்படைந்துள்ளது. விளம்பரம் இதையும் படிங்க: சுகர் சர்ரென குறையணுமா… மாதத்தில் 2 டைம்ஸ் நண்டு சாப்பிடுங்க… இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாகச் சாலையில் விழுந்த மரத்தினை அகற்றி போக்குவரத்தைச் சீர் செய்தனர். மேலும் நீலகிரியில் பொழியும் அதிக மழை காரணமாக உதகையின் முக்கிய சுற்றுலாத்தலமான படகு இல்லத்தில் தற்காலிகமாகப் படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி நகரப் பகுதிகளில் மழை பொழிந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றிக் காணப்படுகிறது. மேலும் உள்ளூர் மக்களும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர். விளம்பரம் இன்றும் நீலகிரி மாவட்டத்தில் அதிக கன மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News , Nilgiris , Ooty , Tamilnadu , Weather News in Tamil First Published : July 26, 2024, 7:56 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.