NILGIRIS

நீலகிரியில் வறண்டு போன இடங்களை வளமாக்கிய மழை... எழில் கொஞ்சும் எமரால்டு ஏரி...

எமரால்டு ஏரிக்கு நீர் வரத்து தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு நிலவிய அதீத கோடை வெப்பத்தின் காரணமாக அணைகள் மற்றும் ஏரிகள், குளங்கள் என அனைத்தும் வற்றும் நிலை ஏற்பட்டது. இதனால் குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியது. இந்தத் தாக்கம் சமவெளிப் பகுதிகளை மட்டும் இன்றி நீலகிரியையும் பாதிப்படையச் செய்தது. தமிழகத்தில் அதிகம் மழை பெறும் மாவட்டமான நீலகிரியில் இந்த ஆண்டு சரியான சமயத்தில் போதுமான மழைப்பொழிவு இல்லாததால் எமரால்டு, அவலாஞ்சி அணை வறட்சிக்கு உள்ளானது. இதனால் இதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் எமரால்டு அணையின் அழகைக் காண வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் தற்போது நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக எமரால்டு, அவலாஞ்சி அணையில் நீர் நிரம்பி வருகிறது. இதனால் போர்த்தி கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விதமாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கின்றனர். போர்த்தி டேமில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையும் படிங்க: நீலகிரியில் மீண்டும் துவங்கிய மழை… கலக்கத்தில் மக்கள்… இதுகுறித்து உள்ளூர் வாசி ஜானகி கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அளவிற்கு மழை பொழிவதில்லை. இந்த ஆண்டு அதிகமான மழை பெய்ததால் இந்த டேம் நிறைந்துள்ளது. இதனால் இதனைச் சுற்றி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்குக் கேரட், பீட்ரூட், பூண்டு போன்றவை சாகுபடி செய்வதற்கு ஏதுவானதாக இருக்கும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் வறண்டு போன இடங்களை வளமாக்கிய மழை... எழில் கொஞ்சும் எமரால்டு ஏரி... நீலகிரியில் வறண்டு போன இடங்களை வளமாக்கிய மழை... எழில் கொஞ்சும் எமரால்டு ஏரி... எமரால்டு ஏரிக்கு நீர் வரத்து நீரின்றி வறண்டு காணப்பட்ட எமரால்டு அணை, அவலாஞ்சி ஏரி மீண்டும் எழில்மிகு தோற்றத்துடன் காணப்படுகின்றன. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : August 9, 2024, 9:59 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு நிலவிய அதீத கோடை வெப்பத்தின் காரணமாக அணைகள் மற்றும் ஏரிகள், குளங்கள் என அனைத்தும் வற்றும் நிலை ஏற்பட்டது. இதனால் குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியது. இந்தத் தாக்கம் சமவெளிப் பகுதிகளை மட்டும் இன்றி நீலகிரியையும் பாதிப்படையச் செய்தது. தமிழகத்தில் அதிகம் மழை பெறும் மாவட்டமான நீலகிரியில் இந்த ஆண்டு சரியான சமயத்தில் போதுமான மழைப்பொழிவு இல்லாததால் எமரால்டு, அவலாஞ்சி அணை வறட்சிக்கு உள்ளானது. இதனால் இதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் எமரால்டு அணையின் அழகைக் காண வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர். விளம்பரம் ஆனால் தற்போது நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக எமரால்டு, அவலாஞ்சி அணையில் நீர் நிரம்பி வருகிறது. இதனால் போர்த்தி கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விதமாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கின்றனர். போர்த்தி டேமில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையும் படிங்க: நீலகிரியில் மீண்டும் துவங்கிய மழை… கலக்கத்தில் மக்கள்… இதுகுறித்து உள்ளூர் வாசி ஜானகி கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அளவிற்கு மழை பொழிவதில்லை. இந்த ஆண்டு அதிகமான மழை பெய்ததால் இந்த டேம் நிறைந்துள்ளது. இதனால் இதனைச் சுற்றி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்குக் கேரட், பீட்ரூட், பூண்டு போன்றவை சாகுபடி செய்வதற்கு ஏதுவானதாக இருக்கும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty , Tourist spots First Published : August 9, 2024, 9:59 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.