ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி இன்றைய கால கட்டங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்கிறோம். இத்தகைய உணவுகளால் உடலுக்குப் போதுமான சத்துக்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உடல்நலக்குறைவிற்கும் காரணமாக அமைகிறது. இந்நிலையில் குழந்தைகள் மத்தியில் உடலுக்குத் தீங்கில்லாத ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது உதகை ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி. நீலகிரி மாவட்டத்தில் இந்த பள்ளி மட்டுமே “Eat Right Campus” என்ற சிறந்த பள்ளிக்கான சான்றிதழைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளியில் 4 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தூய்மையான வளாகம், காலை, மதியம் என இரண்டு வேளை சத்தான உணவுகள், சுகாதாரமான கழிவறைகள், விளையாட்டு உபகரணங்கள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என அனைத்து வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதையும் படிங்க: ஆண்கள் மட்டுமே வழிபடும் வனக்கோவில்… நீலகிரியில் நடைபெறும் பாரம்பரியத் திருவிழா… இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளில் இருந்தே உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே வருங்காலத் தலைமுறையினர் நன்றாக வாழ முடியும் எனத் தெரிவிக்கின்றனர். மேலும் இந்தப் பள்ளியில் PTA ஆசிரியை ஒருவர் தேவையற்ற காகிதங்கள் மற்றும் பொருட்களை வைத்து உருவாக்கி அலங்காரப் பொருட்கள் அனைவர் கண்களையும் கவரும் விதமாக இருந்தது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தில் எங்கள் பள்ளி இந்த உணவுப் பழக்க வழக்கத்தில் சிறந்த பள்ளியாகச் சான்றிதழ் பெற்று இருப்பது பெருமையாக உள்ளது. உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து கருத்தரங்கு நடத்தப்பட்டு மாணவர்களுக்குச் செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டது. இதன் மூலம் சிறந்து உணவுகள் மற்றும் துரித உணவுகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வர்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / பாடத்தோடு உணவுப் பழக்கமும் கற்பிக்கும் பள்ளி... ஆர்.கே.புரம் பள்ளிக்கு புது அங்கீகாரம்... பாடத்தோடு உணவுப் பழக்கமும் கற்பிக்கும் பள்ளி... ஆர்.கே.புரம் பள்ளிக்கு புது அங்கீகாரம்... ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஊட்டியில் உள்ள ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி “Eat Right Campus” என்ற சிறந்த பள்ளிக்கான சான்றிதழைப் பெற்றுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : July 10, 2024, 8:31 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் இன்றைய கால கட்டங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்கிறோம். இத்தகைய உணவுகளால் உடலுக்குப் போதுமான சத்துக்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உடல்நலக்குறைவிற்கும் காரணமாக அமைகிறது. இந்நிலையில் குழந்தைகள் மத்தியில் உடலுக்குத் தீங்கில்லாத ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது உதகை ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி. நீலகிரி மாவட்டத்தில் இந்த பள்ளி மட்டுமே “Eat Right Campus” என்ற சிறந்த பள்ளிக்கான சான்றிதழைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. விளம்பரம் இந்த பள்ளியில் 4 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தூய்மையான வளாகம், காலை, மதியம் என இரண்டு வேளை சத்தான உணவுகள், சுகாதாரமான கழிவறைகள், விளையாட்டு உபகரணங்கள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என அனைத்து வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதையும் படிங்க: ஆண்கள் மட்டுமே வழிபடும் வனக்கோவில்… நீலகிரியில் நடைபெறும் பாரம்பரியத் திருவிழா… இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளில் இருந்தே உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே வருங்காலத் தலைமுறையினர் நன்றாக வாழ முடியும் எனத் தெரிவிக்கின்றனர். மேலும் இந்தப் பள்ளியில் PTA ஆசிரியை ஒருவர் தேவையற்ற காகிதங்கள் மற்றும் பொருட்களை வைத்து உருவாக்கி அலங்காரப் பொருட்கள் அனைவர் கண்களையும் கவரும் விதமாக இருந்தது. விளம்பரம் இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தில் எங்கள் பள்ளி இந்த உணவுப் பழக்க வழக்கத்தில் சிறந்த பள்ளியாகச் சான்றிதழ் பெற்று இருப்பது பெருமையாக உள்ளது. உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து கருத்தரங்கு நடத்தப்பட்டு மாணவர்களுக்குச் செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டது. இதன் மூலம் சிறந்து உணவுகள் மற்றும் துரித உணவுகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வர்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty First Published : July 10, 2024, 8:31 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
சாலை இல்லாத பகுதியிலும் சேவையாற்றும் செவிலியர்... டெல்லிக்கு அழைக்கப்பட்டுப் பாராட்டு...
August 26, 2024ஊட்டியில் திடீர் திடீரென மாறிய வானிலை... சாரல் மழையால் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்...
August 25, 2024What’s New
Spotlight
Today’s Hot
Featured News
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- By Sarkai Info
- July 26, 2024
Latest From This Week
ஆங்கில அறிஞரின் நினைவாக ஊட்டியில் உள்ள பூங்கா... விளையாடக் காத்திருக்கும் குழந்தைகள்...
NILGIRIS
- by Sarkai Info
- June 29, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.