NILGIRIS

நீலகிரியை மிரட்டும் வானிலை... சுழன்று அடிக்கும் சூறைக்காற்றால் சரியும் மரங்கள்...

ஊட்டியில் சூறைக்காற்று நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் கனமழை பொழிந்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுதல் மற்றும் சாலைகளில் மண்சரிவு போன்றவை நிகழ்ந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக அதிக அளவில் வீசும் சூறைக்காற்றினால் சாலையோரங்களில் அதிக அளவில் மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளது. ஊட்டி நகரப் பகுதிகளிலேயே மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஊட்டி இடுஹட்டி சாலையில் தொட்டபெட்டா பகுதியிலிருந்து அட்டபெட்டு மற்றும் கரிமுடுக்கு என்ற இடம் வரையிலும் சுமார் 60க்கும் மேற்பட்ட மரங்கள் சாலைகள் விழுந்துள்ளதால் முழுவதுமாக ஒரு நாளுக்கு மேலாகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதையும் படிங்க: ஆதாரில் பெயர், முகவரி மாற்றனுமா..? வீட்டிலிருந்தே ஈசியா பண்ண சிம்பிள் ஸ்டெப்ஸ்… இரவு பகல் பாராது இயற்கை பாதிப்புகளில் பணிபுரியும் நெடுஞ்சாலைத் துறையினர், மின்சாரத் துறையினர், வருவாய் துறையினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் ஆகியோருக்குப் பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவிக்கின்றனர். அதிக சூறைக்காற்றின் காரணமாகச் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது. இதனால் சுமார் 10 கிராமங்களுக்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை யாராலும் தடுக்க முடியாது இருப்பினும் சம்பந்தப்பட்ட துறையினர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு சற்று விரைவாக மின் சேவை வழங்க வேண்டும் எனவும் பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர். மேலும் இது ஆடி மாதம் என்பதால் நேர்த்திக்கடன் மற்றும் கோவில்களுக்குப் பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். அடை மழையிலும் நேற்றைய தினம் பக்தி பரவசத்தில் அட்டபெட்டு கிராம மக்கள் மேளதாளங்களுடன் பாடல் பாடி உற்சாக நடனமாடி மூன்று பெரிய கரகம் எடுத்துச் சென்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / நீலகிரியை மிரட்டும் வானிலை... சுழன்று அடிக்கும் சூறைக்காற்றால் சரியும் மரங்கள்... நீலகிரியை மிரட்டும் வானிலை... சுழன்று அடிக்கும் சூறைக்காற்றால் சரியும் மரங்கள்... ஊட்டியில் சூறைக்காற்று நீலகிரியில் வீசும் சூறைக்காற்று காரணமாகப் பல இடங்களில் மரங்கள் சரிந்துள்ளன. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : July 29, 2024, 8:12 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் கனமழை பொழிந்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுதல் மற்றும் சாலைகளில் மண்சரிவு போன்றவை நிகழ்ந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக அதிக அளவில் வீசும் சூறைக்காற்றினால் சாலையோரங்களில் அதிக அளவில் மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளது. ஊட்டி நகரப் பகுதிகளிலேயே மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஊட்டி இடுஹட்டி சாலையில் தொட்டபெட்டா பகுதியிலிருந்து அட்டபெட்டு மற்றும் கரிமுடுக்கு என்ற இடம் வரையிலும் சுமார் 60க்கும் மேற்பட்ட மரங்கள் சாலைகள் விழுந்துள்ளதால் முழுவதுமாக ஒரு நாளுக்கு மேலாகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். விளம்பரம் இதையும் படிங்க: ஆதாரில் பெயர், முகவரி மாற்றனுமா..? வீட்டிலிருந்தே ஈசியா பண்ண சிம்பிள் ஸ்டெப்ஸ்… இரவு பகல் பாராது இயற்கை பாதிப்புகளில் பணிபுரியும் நெடுஞ்சாலைத் துறையினர், மின்சாரத் துறையினர், வருவாய் துறையினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் ஆகியோருக்குப் பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவிக்கின்றனர். அதிக சூறைக்காற்றின் காரணமாகச் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது. இதனால் சுமார் 10 கிராமங்களுக்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை யாராலும் தடுக்க முடியாது இருப்பினும் சம்பந்தப்பட்ட துறையினர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு சற்று விரைவாக மின் சேவை வழங்க வேண்டும் எனவும் பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர். விளம்பரம் மேலும் இது ஆடி மாதம் என்பதால் நேர்த்திக்கடன் மற்றும் கோவில்களுக்குப் பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். அடை மழையிலும் நேற்றைய தினம் பக்தி பரவசத்தில் அட்டபெட்டு கிராம மக்கள் மேளதாளங்களுடன் பாடல் பாடி உற்சாக நடனமாடி மூன்று பெரிய கரகம் எடுத்துச் சென்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty First Published : July 29, 2024, 8:12 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.