NILGIRIS

கூடலூர் அருகே நிலச்சரிவு அபாயம் : சாலை, வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் அச்சம்!

கூடலூர் அருகே நிலச்சரிவு அபாயம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மேல்கூடலூர், கோக்கால் ஒன்னறை சென்ட் பகுதியில் குடியிருப்புகளில் திடீரென விரிசல் ஏற்பட்டது. சாலைகள் மட்டுமின்றி வீடுகளும் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். கூடலூர் அடுத்த கோக்கால் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளில் 80 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்திற்கு தலா ஒன்றரை சென்ட் நிலம் வழங்கப்பட்டதால் இப்பகுதி ’ஒன்றரை சென்ட் காலனி’ என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் கூடலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்த போது, இப்பகுதியில் சுமார் 15 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால், 48 முதியவர்கள் உட்பட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் வீடுகளில் விரிசல் அதிகமாக ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நிலச்சரிவு ஏற்படும் பகுதி பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது என பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் வாடகை வீடுகளிலும் முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். குறிப்பாக புதிதாக வீடு கட்டிக் குடியேற முடியாமல் போனதாக குடியிருப்பு வாசி ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார். குடியிருப்பு பகுதிகளை ஒட்டி மருத்துவமனை பணிகள் நடைபெறுகிறது அப்போது மண் பாறைகள் அகற்றப்பட்டதால்தான் வீடுகளும் சாலைகளும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு எத்தனையோ மழைகாலங்களை தாங்கள் பார்த்திருக்கிறோம் ஆனால் இது போன்ற வீடுகள் விரிசல் ஏற்பட்டதில்லை என்று குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளார். வீடுகளில் விரிசல் ஏற்படுவது தொடர்ந்து வருவதால் வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து வாடகை வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இது மட்டுமல்லாமல் அப்பகுதியில் 7 மீட்டர் அளவிற்கு வீடுகள் பூமியில் புதையுண்டு வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கும் போது மருத்துவமனைகள் கட்டப்படுவதால் விரிசல் ஏற்படவில்லை என்றும், மழையின் காரணமாகவே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே ஓரிரு நாட்களில் இந்திய புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு கோக்கல், ஒன்னறை சென்ட் பகுதியில் ஆய்வு நடத்த உள்ளனர். வயநாடு நிலச்சரிவின் அச்சத்தில் இருந்தே மீளாத நிலையில், வீடுகள் மண்ணிற்குள் புதைவது நீலகிரி மக்கள் மத்தியில் பேரதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை நிபுணர்கள் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட முடியும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.