NILGIRIS

இனி மலர் கண்காட்சியில் எல்லோர் கண்களும் இது மேல தான்.. தோட்டக்கலைத்துறையின் புதிய முயற்சி

ஆர்னமெண்டல் கேள் செடி நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கண்களைக் கவரும் வகையில் மலர்க் கண்காட்சியும் நடத்தப்படுவது வழக்கம். இந்த மலர்க் கண்காட்சியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தருகின்றனர். அவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் புதிய புதிய மலர்களை அறிமுகப்படுத்திக் காட்சிப்படுத்துவதில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிக ஆர்வம் காட்டுகிறது. கடந்த சில தினங்களாக அதிக கன மழையின் காரணமாக ஊட்டியின் முக்கிய சுற்றுலா தளமான தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் மேம்பாட்டுத் துறையின் சார்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகையின் முன்புறம் ஆர்னமென்டல் கேள் செடிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு இந்தச் செடிகள் வளர்க்கப்பட்டு அலங்காரத்திற்காக வைக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். ஆர்னமென்டல் கேள் தாவரம் பிராசிகா ஓலரேசியா (வகைப்பாட்டியல்:Brassica oleracea) என்ற தாவரயினம், பிராசிகேசியே (Brassicaceae) தாவரக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதில் முட்டைக்கோஸ், பிரோக்கோலி, காலிஃபிளவர், பரட்டைக்கீரை, கொலார்ட் கீரைகள், சவோய் முட்டைக்கோசு, பசம்நூல்கோல் மற்றும் கைலான் போன்ற காய்கறிகளாகப் பயன்படுத்தப்படும் பல பொதுவான பயிர் சாகுபடிகள், இவ்வகையின் கீழ் அமைகிறது. உதகை தாவரவியல் பூங்காவில் ஆர்னமென்டல் கேள் செடிகள் முழு முயற்சியுடன் வளர்க்கப்பட்ட வருகிறது. இனிவரும் காலங்களிலும் மலர்க்கண்காட்சிகளில் இந்த ஆர்னமென்டல் கேள் செடி அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் எனக் கூறப்படுகிறது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / இனி மலர் கண்காட்சியில் எல்லோர் கண்களும் இது மேல தான்.. தோட்டக்கலைத்துறையின் புதிய முயற்சி இனி மலர் கண்காட்சியில் எல்லோர் கண்களும் இது மேல தான்.. தோட்டக்கலைத்துறையின் புதிய முயற்சி ஆர்னமெண்டல் கேள் செடி அழகிய தோற்றத்துடன் காணப்படும் ஆர்னமென்டல் கேள் மலர் இனி மலர்க் கண்காட்சிகளில் அனைவரின் கண்களையும் கவரும். படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : July 26, 2024, 10:45 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கண்களைக் கவரும் வகையில் மலர்க் கண்காட்சியும் நடத்தப்படுவது வழக்கம். இந்த மலர்க் கண்காட்சியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தருகின்றனர். அவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் புதிய புதிய மலர்களை அறிமுகப்படுத்திக் காட்சிப்படுத்துவதில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிக ஆர்வம் காட்டுகிறது. கடந்த சில தினங்களாக அதிக கன மழையின் காரணமாக ஊட்டியின் முக்கிய சுற்றுலா தளமான தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் மேம்பாட்டுத் துறையின் சார்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகையின் முன்புறம் ஆர்னமென்டல் கேள் செடிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. விளம்பரம் இதையும் படிங்க: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு இந்தச் செடிகள் வளர்க்கப்பட்டு அலங்காரத்திற்காக வைக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். ஆர்னமென்டல் கேள் தாவரம் பிராசிகா ஓலரேசியா (வகைப்பாட்டியல்:Brassica oleracea) என்ற தாவரயினம், பிராசிகேசியே (Brassicaceae) தாவரக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதில் முட்டைக்கோஸ், பிரோக்கோலி, காலிஃபிளவர், பரட்டைக்கீரை, கொலார்ட் கீரைகள், சவோய் முட்டைக்கோசு, பசம்நூல்கோல் மற்றும் கைலான் போன்ற காய்கறிகளாகப் பயன்படுத்தப்படும் பல பொதுவான பயிர் சாகுபடிகள், இவ்வகையின் கீழ் அமைகிறது. உதகை தாவரவியல் பூங்காவில் ஆர்னமென்டல் கேள் செடிகள் முழு முயற்சியுடன் வளர்க்கப்பட்ட வருகிறது. இனிவரும் காலங்களிலும் மலர்க்கண்காட்சிகளில் இந்த ஆர்னமென்டல் கேள் செடி அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் எனக் கூறப்படுகிறது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty , Tourist spots First Published : July 26, 2024, 10:45 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.