NILGIRIS

ஊட்டியில் ஒரு குட்டி திபெத்... திபெத்தியன் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்யும் டூரிஸ்ட்கள்...

திபெத் மக்கள் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். ஊட்டியை ரசிக்க வரும் அனைவரும் வருகை புரியும் ஒரு முக்கிய இடமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு வருபவர்கள் அனைவருமே அந்தப் பூங்காவைச் சுற்றியுள்ள கடைகளையும் பார்வையிடுகின்றனர். ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் குளிருக்கு இதமாக ஸ்வட்டர்கள், ஷால் ,ஜெர்க்கின்கள் வாங்குவார்கள். அவர்களுக்காக இங்குள்ள திபெத்தியன் மார்க்கெட்டில் உல்லன் ஆடைகள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு கடை வைத்திருக்கும் திபெத்தியர்கள் ஊட்டிக்கு வந்து சுமார் 40 ஆண்டு காலமாக வியாபாரம் செய்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். முன்பெல்லாம் இவர்கள் கடைவீதிகளில் வியாபாரம் செய்து வந்த நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம் அவர்கள் கடை அமைத்துக்கொள்ள இடம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதையும் படிங்க: Sunday Special: சிம்பிளான பொருட்கள் வைச்சு சூப்பரான தக்காளி பூண்டு சாதம்… அதன் பின்னர் சுழற்சி முறையில் மொத்தமுள்ள 63 கடைகளில் வெளிப்பகுதிகளிலும் உட்பகுதிகளிலும் கடை மாற்றிக் கொள்வோம் என்றும், வியாபாரம் புரிவதற்காக அனைத்து மொழிகளையும் ஒரு அளவிற்குப் பேசத் தொடங்கிவிட்டதாகவும் திபெத்தியர்கள் தெரிவித்தனர். தங்களது கடைகளில் 280 முதல் 1600 ரூபாய் வரையிலும் துணிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர். பனிக்காலங்களில் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் விற்பனைக்காகப் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றனர். பெண்கள் இங்கிருந்து விற்பனையைப் பார்த்துக் கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். வியாபாரம் இதுவரையிலும் சிறந்த முறையில் நடந்து வருவதாகவும், கொரோனா காலகட்டத்திற்குப் பின்பு சுற்றுலாப் பயணிகள் வருகை சற்று குறைந்து விட்டதால் வியாபாரமும் ஓரளவுக்கு நலிவடைந்துவிட்டதாக வேதனை தெரிவித்தனர். சீசன் காலங்களில் நல்ல வியாபாரம் நடைபெறும் என்றும், தற்பொழுது ஊட்டியில் அதிக மழை, குளிர் நிலவும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்து விடுகிறது எனவும் தெரிவித்தனர். இதையும் படிங்க: கொடிசியா மைதானத்தில் பாகுபலி எக்ஸ்போ… மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தைக் காண மக்கள் ஆர்வம்… மேலும் தங்களின் குழந்தைகளும் உள்ளூரிலேயே உள்ள பள்ளிகளில் பயின்று வருவதாகவும், கல்வி பயின்ற பின்னர் அவ்வப்போது தங்கள் வியாபாரத்திற்கு உதவியாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். திபெத்தியன் மார்க்கெட் குறித்து அங்கு கடை வைத்துள்ள பெண்மணி ஒருவர் கூறுகையில், “வியாபாரம் நன்றாக நடந்து வருகிறது. 63 குடும்பங்களுக்கு 63 கடைகள் இந்த வளாகத்தில் உள்ளதாகவும். மழைக்காலம் மற்றும் அதிக குளிரினால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து வியாபாரம் மந்தமாகும் என்றும், மற்ற சமயங்களில் சிறந்த முறையில் வியாபாரம் நடைபெறுகிறது” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.