NILGIRIS

நீலகிரியை மிரட்டும் காலநிலை மாற்றம்... டீ எஸ்டேட்களில் குறைந்து வரும் பாரம்பரிய மரங்கள்...

நீலகிரியில் குறைந்து வரும் பாரம்பரிய மரங்கள் நீலகிரி மாவட்டத்தில் பச்சை போர்வை போர்த்தியதைப் போலச் சிறப்பான காட்சி தருவது தேயிலைத் தோட்டங்கள் தான். இந்த தேயிலைத் தோட்டங்களில் வருடத்திற்கு மூன்று முறை தேயிலை பறிக்கின்றனர். முன்பெல்லாம் தேயிலைத் தோட்டங்களில் செடிகளுக்கிடையில் பல்வேறு பழ மரங்கள், நீர்நிலைகளின் நீர் ஆதாரம் எனக் கூறப்படும் சில்வர் ஓக் போன்ற பல்வேறு பாரம்பரிய ரக மரங்கள் இருந்தது. ஆனால் தற்பொழுது தேயிலைத் தோட்டங்களில் இருந்த மரங்கள் குறைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் உள்ள கற்பூர மரங்களால் நீர்நிலைகள் வற்றும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கற்பூர மரங்களை அகற்றுவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும் தேயிலைத் தோட்டங்களில் முன்பை போல் தற்போது பாரம்பரிய மரங்களைக் காண முடிவதில்லை. இதையும் படிங்க: இனி சீசன்ல ட்ராபிக் டென்ஷன் இருக்காது… இயற்கையை ரசித்தபடி செல்ல ஊட்டியில் புது ரோடு… தேயிலைத் தோட்டங்களில் இருக்கும் மரங்களின் இலைகள் தேயிலைத் தோட்டங்களில் விழுகிறது. இதனால் தேயிலை செடிகளின் வளர்ச்சி குறைவதால் தேயிலைத் தோட்டங்களில் இருக்கும் மரங்கள் அகற்றப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றன. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் சரியான மழைப்பொழிவு இல்லாத காரணத்தினாலும், காலநிலை மாற்றத்தாலும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவாமல் இருக்கத் தேயிலைத் தோட்டங்களில் மீண்டும் பாரம்பரிய மர வகைகளை நட்டு பராமரிக்க வேண்டும் எனப் பலரும் குரல் கொடுக்கின்றனர். தேயிலைத் தோட்டங்களில் மரம் வளர்ப்பது குறித்து தேயிலை விவசாயி ஒருவர் கூறுகையில், “50 ஆண்டுகளுக்கு மேலாக தேயிலை விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஏக்கர் தேயிலைத் தோட்டம் இருந்தால் அதில் 100 முதல் 150 வரை சில்வர் ஓக் மரங்கள் இருந்தன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆயிரம் ஏக்கர் தேயிலைத் தோட்டத்தில் 100 மரங்களைக் காண்பதே அரிதாக உள்ளது. இதையும் படிங்க: காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் போன்ற சக்தி… ஊட்டி மாரியம்மன் கோவிலில் இவ்வளவு சிறப்புகளா… நீலகிரியில் பொதுவாக ஏப்ரல் மாதத்தில் வெயில் அடிக்கும் ஜூன், ஜூலை மாதத்தில் நன்கு மழை பொழியும். ஆனால் தற்போது மழைக்குப் பதிலாக வெயில் தான் அடிக்கிறது. இதற்குக் காரணம் பாரம்பரிய மரங்கள் அழிந்தது தான். இந்த ஜூன், ஜூலை மாதங்களில் விவசாயத்திற்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இதே நிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால் 20 ஆண்டுகள் கழித்து விவசாயம் செய்வது மிகவும் கடினமான சூழ்நிலையாக மாறிவிடும். நீலகிரி மாவட்டத்தில் கற்பூரம் மரங்களை அழித்த இடங்களில் எல்லாம் நீரை உற்பத்தி செய்யக்கூடிய மரங்களை நடவு செய்து பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.