NILGIRIS

மாமிச உணவைத் தவிர்க்கும் கிராம மக்கள்... நீலகிரியில் இப்படி ஒரு கிராமமா...

மாமிச உணவைத் தவிர்க்கும் கிராம மக்கள்... நீலகிரியில் இப்படி ஒரு கிராமமா... தமிழகத்தில் விவசாயத்திலும் சுற்றுலாத் துறையிலும் முக்கியப்பங்கு வகிக்கும் மலை மாவட்டமான நீலகிரி அதிக அளவில் பழங்குடியினர் வசிக்கும் மாவட்டமாகவும் உள்ளது. இங்குப் பழங்குடியினர் தவிர்த்து பிற சமூக மக்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனால் பிற மாவட்டங்களில் இல்லாத வகையில் நீலகிரியில் வித்தியாசமான பழக்க வழக்கங்களும், விநோதமான வழிபாட்டு நடைமுறைகளும் உள்ளன. அந்தவகையில் நீலகிரி மாவட்டத்தில் கக்குச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடத்தில் அமைந்துள்ள தீனட்டி கிராமம் ஒரு வித்தியாசமான நடைமுறை கொண்ட கிராமமாக உள்ளது. இந்த கிராமம் இயற்கையைக் கொஞ்சம் பசுமையான மலைகள் மரங்கள் விவசாய நிலங்கள் தேயிலைத் தோட்டங்கள் என அழகு சூழ்ந்து அமைந்துள்ள ஓர் கிராமமாக உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அதிக அளவில் விவசாயம் செய்கின்றனர். மூதாதையர் காலம் முதலே சிவன் வழிபாடு செய்யும் இவர்கள் வருடத்திற்கு ஒருமுறை சிவராத்திரியின் பொழுது அந்த திருவிழாவைச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இதையும் படிங்க: உற்சாக வெள்ளம் கொட்டும் உயிலட்டி நீர்வீழ்ச்சி… அட்வெஞ்சர் விரும்பிகளுக்கு சூப்பர் ஸ்பாட்… இந்த கிராமத்தில் இதனால் வரையிலும் மாமிச வகைகளை இந்த கிராமத்திற்குள் அனுமதிப்பதில்லை மற்றும் யாரும் சாப்பிடுவதும் இல்லை என கூறப்படுகிறது. மூதாதையர் காலம் முதலே இதனை வழக்கத்தில் பின்பற்ற வருவதாகவும், முட்டை கூட சாப்பிடுவதில்லை என கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். மாமிச உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பதினால் ஏதேனும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளதா என கேட்ட பொழுது எங்களுடைய தாத்தா பாட்டி காலம் முதல் இதுநாள் வரையிலும் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளோம். எங்கள் கிராமத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது இல்லவேயில்லை எனத் தெரிவிக்கின்றனர். மேலும் தாங்கள் பின்பற்றி வரும் மூதாதையர்கள் வாழ்க்கை முறையை வருங்காலத் தலைமுறைக்கும் கற்றுக் கொடுத்துப் பின்பற்ற செய்கின்றோம் எனவும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தீனட்டி கிராமத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் பிரகாஷ் கூறுகையில், “இதுநாள் வரையிலும் இயற்கை உணவுகளையே உண்டு வருகிறோம். கடந்து பத்து ஆண்டுகளில் ரசாயனத்தின் தாக்கம் அதிகமானதால் ரசாயனப் பொருட்கள் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுவரையில் சைவ உணவை மட்டுமே உட்கொண்டு வருகிறோம். சைவ உணவை உட்கொண்டு விவசாயம் பணிகளைச் செய்து வருகிறோம். நாங்கள் அனைவரும் ஆரோக்கியமாகவே உள்ளோம்” எனத் தெரிவித்தார். இதையும் படிங்க: மேட்டூர் அணை உபரி நீர் வீணாகாது… சரபங்கா திட்டத்தால் பயன்பெறும் 1 லட்சம் ஏக்கர் நிலம்… மேலும் தீனட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மனோ கூறுகையில், “நாங்கள் இதுவரையிலும் சைவ உணவுகளை உட்கொள்கிறோம். எனக்குத் தெரிந்து 7, 8 தலைமுறைகளுக்கு முன்பிருந்தே இந்த வழக்கம் தொடர்ந்து வருகிறது. நாங்கள் சிவலிங்கத்தை வழிபட்டு ருத்ராட்சக் கொட்டைகளைக் கழுத்தில் அணிந்துள்ளோம். மேலும், பூணூல் போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளோம். இதனால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தாலும் சைவ உணவுகளையே உட்கொள்வர். எங்கள் கிராம இளைஞர்கள் பெங்களூர், சென்னை என வெளிப்பகுதிகளில் பணிபுரிந்தாலும் அங்கேயும் சைவ உணவு உட்கொள்பவர்களாகவே இருந்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.