NILGIRIS

அப்துல் கலாமின் பாராட்டு தான் என்னை எழுத வைக்கிறது... 70 வயதிலும் தொடரும் எழுத்து பயணம்...

கவிதாயினி மணி அர்ஜுனன் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான கவிதாயினி B.Sc, M.A, M.Ed, M.Phil பயின்றுள்ளார். சுமார் 70 வயதைத் தாண்டிய இவர் இன்றளவும் புத்தகங்களை எழுதி வருகிறார். இவரது 22 படைப்புகளைப் புத்தகங்களாகவும், சி.டி வடிவிலும் வெளியிட்டுள்ளார். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமிடம் பாராட்டுப் பெற்றுள்ளார். இவர் நீலகிரி பாமணி, நீலகிரி படுகர் இன முதல் கவிதாயினி, இறையருள் கவி, தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது, அமுத கவி, தமிழ் வேல், மொழி வித்தகர், குறிஞ்சி தமிழமுதம், மொழிச்சிற்பி ஆகிய பெயர்களால் புகழப்படுகிறார். மேலும் இவர் பெற்ற விருதுகளில் கவிக்குயில் சரோஜினி தேவி விருது, சாதனையாளர் விருது, சேவா ரத்னா விருது போன்ற சுமார் 20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவர் எழுதிய நூல்களில் மூன்று நூல்கள் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் இடம்பெற்றுள்ளது. இதையும் படிங்க: நீலகிரியிலிருந்து டைமிற்கு சந்தை செல்லும் காய்கறிகள்… வியக்க வைக்கும் லாரி டிரைவர்கள்… மனம் விட்டுப் பேசலாம் என்று கவிதை நூல் சிறந்த புதுக்கவிதை நூலாகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணம் முடிப்பு வழங்கப்பட்டது. மேலும் பாரத தாயின் வீதி உலா உணர்த்தும் உண்மைகள் என்ற நூலுக்கு அமெரிக்கா உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் The Enlightenment Awad அளித்துப் பாராட்டி உள்ளது. நூல்கள் குறித்து கவிதாயினி மணி அர்ஜுனன் கூறுகையில், “நான் ஒன்றும் செய்வதில்லை என்னை இயக்கும் கருமாரியம்மன் என்னை வழி நடத்துகிறார். சமுதாய சிந்தனையோடும் ஆன்மீக உணர்வோடும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளேன். அனைவரிடத்திலும் அன்பும் பண்பும் சிறந்து இல்லறத்திலும் வெளிப்புறத்திலும் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்து வாழக் குடியில்லா சமுதாயத்தை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறான விருதுகளை வாங்கியிருப்பது எனக்குக் கிடைத்த ஒரு வரமாகவே கருதுகிறேன்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / அப்துல் கலாமின் பாராட்டு தான் என்னை எழுத வைக்கிறது... 70 வயதிலும் தொடரும் எழுத்து பயணம்... அப்துல் கலாமின் பாராட்டு தான் என்னை எழுத வைக்கிறது... 70 வயதிலும் தொடரும் எழுத்து பயணம்... கவிதாயினி மணி அர்ஜுனன் தனது படைப்பிற்காக ஏபிஜே அப்துல் கலாமிடம் பாராட்டப்பெற்ற ஓய்வு பெற்ற பேராசிரியர் தனது 70 வயதிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : August 8, 2024, 7:32 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான கவிதாயினி B.Sc, M.A, M.Ed, M.Phil பயின்றுள்ளார். சுமார் 70 வயதைத் தாண்டிய இவர் இன்றளவும் புத்தகங்களை எழுதி வருகிறார். இவரது 22 படைப்புகளைப் புத்தகங்களாகவும், சி.டி வடிவிலும் வெளியிட்டுள்ளார். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமிடம் பாராட்டுப் பெற்றுள்ளார். இவர் நீலகிரி பாமணி, நீலகிரி படுகர் இன முதல் கவிதாயினி, இறையருள் கவி, தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது, அமுத கவி, தமிழ் வேல், மொழி வித்தகர், குறிஞ்சி தமிழமுதம், மொழிச்சிற்பி ஆகிய பெயர்களால் புகழப்படுகிறார். விளம்பரம் மேலும் இவர் பெற்ற விருதுகளில் கவிக்குயில் சரோஜினி தேவி விருது, சாதனையாளர் விருது, சேவா ரத்னா விருது போன்ற சுமார் 20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவர் எழுதிய நூல்களில் மூன்று நூல்கள் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் இடம்பெற்றுள்ளது. இதையும் படிங்க: நீலகிரியிலிருந்து டைமிற்கு சந்தை செல்லும் காய்கறிகள்… வியக்க வைக்கும் லாரி டிரைவர்கள்… மனம் விட்டுப் பேசலாம் என்று கவிதை நூல் சிறந்த புதுக்கவிதை நூலாகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணம் முடிப்பு வழங்கப்பட்டது. மேலும் பாரத தாயின் வீதி உலா உணர்த்தும் உண்மைகள் என்ற நூலுக்கு அமெரிக்கா உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் The Enlightenment Awad அளித்துப் பாராட்டி உள்ளது. விளம்பரம் நூல்கள் குறித்து கவிதாயினி மணி அர்ஜுனன் கூறுகையில், “நான் ஒன்றும் செய்வதில்லை என்னை இயக்கும் கருமாரியம்மன் என்னை வழி நடத்துகிறார். சமுதாய சிந்தனையோடும் ஆன்மீக உணர்வோடும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளேன். அனைவரிடத்திலும் அன்பும் பண்பும் சிறந்து இல்லறத்திலும் வெளிப்புறத்திலும் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்து வாழக் குடியில்லா சமுதாயத்தை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறான விருதுகளை வாங்கியிருப்பது எனக்குக் கிடைத்த ஒரு வரமாகவே கருதுகிறேன்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , writer First Published : August 8, 2024, 7:32 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.