NILGIRIS

சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்... நீலகிரியில் இனி பொக்லைன் இயக்க கட்டுப்பாடு...

பொக்லைன் இயந்திரங்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களைக் கொண்ட மாவட்டமாக நீலகிரி விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீலகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவதால் சமீப காலங்களில் மலைகளின் மீதும், பாதுகாப்பற்ற இடங்களில் கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக JCB இயந்திரங்களை அனுமதியின்றி இயக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஜேசிபி இயந்திரங்களை இயக்குவதற்கு வேளாண் துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும் என தெரிவித்திருப்பதால் உரிய அனுமதி இன்றி ஜேசிபி வாகனங்களைக் கொண்டு மலைகளைக் குறைவதும் சாலைகள் அமைப்பதும் தடுக்கப்படும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கின்றனர். இதையும் படிங்க: 40 நாள் உழைப்பு… மருத்துவ குணம் கொண்ட பனங்கற்கண்டு இப்படி தான் தயாராகிறது… இதுகுறித்து இளித்தொரை பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆல்துரை கூறுகையில், “நாங்கள் சுற்றுச்சூழல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறோம். ஜேசிபி இயந்திரங்களில் ஒரு நாளைக்கு மட்டும் உத்தரவைப் பெற்றுக் கொண்டு பல நாட்கள் பயன்படுத்த வருகின்றனர். தற்பொழுது ஜேசிபி இயந்திரங்களை இயக்க வேளாண்மைத் துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும் என தகவல் கிடைத்துள்ளது. வேளாண்மைத் துறையின் உயர் அதிகாரிகள் திடமான சிந்தனை மற்றும் நோக்கத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரையிலும் வருவாய் துறை ஜேசிபி எந்திரங்களைக் கண்காணித்து வந்தது தற்போது, வேளாண்மைத் துறைக்கு வந்துள்ளதால் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு அபாயம் ஏற்படாமல் தடுக்க முடியும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்... நீலகிரியில் இனி பொக்லைன் இயக்க கட்டுப்பாடு... சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்... நீலகிரியில் இனி பொக்லைன் இயக்க கட்டுப்பாடு... பொக்லைன் இயந்திரங்கள் நீலகிரியில் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்து வகையில் பொக்லைன் இயந்திரங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : September 29, 2024, 4:29 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களைக் கொண்ட மாவட்டமாக நீலகிரி விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீலகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவதால் சமீப காலங்களில் மலைகளின் மீதும், பாதுகாப்பற்ற இடங்களில் கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக JCB இயந்திரங்களை அனுமதியின்றி இயக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஜேசிபி இயந்திரங்களை இயக்குவதற்கு வேளாண் துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும் என தெரிவித்திருப்பதால் உரிய அனுமதி இன்றி ஜேசிபி வாகனங்களைக் கொண்டு மலைகளைக் குறைவதும் சாலைகள் அமைப்பதும் தடுக்கப்படும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கின்றனர். விளம்பரம் இதையும் படிங்க: 40 நாள் உழைப்பு… மருத்துவ குணம் கொண்ட பனங்கற்கண்டு இப்படி தான் தயாராகிறது… இதுகுறித்து இளித்தொரை பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆல்துரை கூறுகையில், “நாங்கள் சுற்றுச்சூழல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறோம். ஜேசிபி இயந்திரங்களில் ஒரு நாளைக்கு மட்டும் உத்தரவைப் பெற்றுக் கொண்டு பல நாட்கள் பயன்படுத்த வருகின்றனர். தற்பொழுது ஜேசிபி இயந்திரங்களை இயக்க வேளாண்மைத் துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும் என தகவல் கிடைத்துள்ளது. வேளாண்மைத் துறையின் உயர் அதிகாரிகள் திடமான சிந்தனை மற்றும் நோக்கத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரையிலும் வருவாய் துறை ஜேசிபி எந்திரங்களைக் கண்காணித்து வந்தது தற்போது, வேளாண்மைத் துறைக்கு வந்துள்ளதால் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு அபாயம் ஏற்படாமல் தடுக்க முடியும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty First Published : September 29, 2024, 4:29 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.