NILGIRIS

கிரவுட் இல்லாமல் கண்டுகளிக்கலாம்... சிம்ஸ் பூங்காவில் சில் பண்ணும் சுற்றுலாப் பயணிகள்...

சிம்ஸ் பூங்கா காட்சிகள் நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரப் பகுதியிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலா தளமாக விளங்குவது சிம்ஸ் பூங்கா. குன்னூரில் மிக முக்கியமான ஒரு பூங்காவாக இந்த சிம்ஸ் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் அதிகம் விரும்பி வரக்கூடிய ஓர் இடமாக உள்ளது. இங்கு பல்வேறு பழமையான மரங்கள் மற்றும் இயற்கையான புல்வெளி அமைதியான சூழ்நிலை என அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. வார நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாகவும் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவும் காணப்படும். முக்கிய நெடுஞ்சாலையிலேயே அமைந்துள்ளதால் இந்த பூங்காவைக் கடந்தே குன்னூரில் மற்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல வேண்டி உள்ளது. இதனாலேயே அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்த பூங்காவினை பார்வையிடுகின்றனர். இங்கு ஒவ்வொரு மரத்திற்கும் QR Code அமைத்து அந்த மரத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதமாக அமைத்துள்ளனர். இதையும் படிங்க: அண்ணாமலையார் கோவிலை நின்ற இடத்திலிருந்தே பார்க்கலாம்… ஆசையாசையாய் பார்வையிடும் பக்தர்கள் மேலும் இந்த பூங்காவின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஏரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் என அனைவரும் விரும்பி புகைப்படம் எடுத்துக் கொண்டும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டும் பொழுதைக் கழிக்கின்றனர். இந்த பூங்கா குறித்து ரஷ்யாவில் MBBS பயிலும் காவியா கூறுகையில், “11 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வருகை புரிந்து இருந்தோம். என்னுடைய சிறுவயதில் வருகை புரிந்த போது அதிகமான பூக்கள் இருந்தது. தற்பொழுது அந்த அளவிற்கு பூக்கள் இல்லை. காலநிலையும் அருமையாக உள்ளது. மக்கள் கூட்டம் சற்று குறைவாக இருப்பதனால் அனைத்து பகுதிகளையும் ரசித்து செல்ல முடிகிறது. சீசன் சமயங்களில் பெறப்பட்ட நுழைவு கட்டணம் தற்பொழுதும் பெறப்பட்டு வருகிறது. சீசன் சமயங்களைத் தவிர மற்ற தினங்களில் இதனைக் குறைத்தால் இன்னும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவர். சுத்தமான காற்று பசுமையான அழகு மனதிற்கு நிறைவாக உள்ளது” எனத் தெரிவித்தார். இதையும் படிங்க: என்ன பெரிய சாக்லேட்… இதை சாப்பிட்டு பாருங்க… ஓலைப் பெட்டியில் குடுக்குறது தான் ஹைலட்… மேலும், குன்னூர் பகுதியில் சேர்ந்து சாதிக் தெரிவிக்கையில், “இது ஒரு முக்கிய பூங்காவாகத் திகழ்கிறது. 28 ஏக்கராவில் அரிய வகை மலர்கள் மரங்கள் என சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருவருக்கு திரும்பிச் செல்லும் மனமே வராது. கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியான பழக் கண்காட்சி இந்த பூங்காவில் சிறப்பாக நடைபெறும். உள்ளூர் மக்களாகிய நாங்களும் அதிகம் இந்த பூங்காவிற்கு வருகை புரிவோம். குருவிகளின் சத்தமும் இயற்கையான அழகும் மனதிற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. இங்கிருக்கும் படகு இல்லத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வருகின்றனர். பெரியவர்களும் குழந்தைகளாக மாறி இந்த பில் தரைகளில் உருண்டு விளையாடும் காட்சிகளைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வருகை புரிந்து இந்த இயற்கை அழகை ரசித்துச் செல்லுங்கள்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.