NILGIRIS

ஊட்டியில் தூறிச் சென்ற திடீர் மழை... மண் குளிர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி...

ஊட்டியில் திடீர் மழை ஊட்டிக்குச் சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இன்று லேசாக மழை தூறிச் சென்றது. ஊட்டியில் சமீப நாட்களாகக் காலை நேரங்களில் பனிப்பொழிவு இருந்து வந்த நிலையில், மதிய நேரங்களில் வெயில் அடித்து வந்தது. இந்நிலையில் இன்று மதிய வேளையில் சாரல் மழை பொழிந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்தபடி மலையரசியின் அழகைச் சுற்றிப்பார்த்து ரசித்தனர். மேலும் ஊட்டியில் பெரும்பாலான விவசாய நிலங்களிலும் கேரட், பீட்ரூட், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றைப் பயிரிட்டுள்ள விவசாயிகளும் இந்த மிதமான சாரல் மழையினால் மகிழ்ச்சி அடைந்தனர். இதையும் படிங்க: பந்தக்கால் நாட்டுடன் துவங்கியது திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா… மகாதீபம் தேதி தெரியுமா..? இந்த திடீர் சாரல் மழையால் சலைகளில் பலரும் கைகளில் குடை இன்றி நனைந்து சென்றனர். குளுகுளு சூழலை அனுபவிக்க ஊட்டிக்கு வரும் மக்களை மகிழ்விக்கும் வகையில் பெய்த இந்த மழையால் ஊட்டியின் மண்ணும் குளிர்ந்துள்ளது. மலை மாவட்டத்தில் மழை விட்ட பிறகு இயற்கையான அழகு பிரமிக்க வைக்கும் அளவில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் விரும்பி புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் தூறிச் சென்ற திடீர் மழை... மண் குளிர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி... ஊட்டியில் தூறிச் சென்ற திடீர் மழை... மண் குளிர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி... ஊட்டியில் திடீர் மழை ஊட்டியில் பெய்த திடீர் சாரல் மழையால் சுற்றுலாப் பயணிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : September 23, 2024, 7:59 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் ஊட்டிக்குச் சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இன்று லேசாக மழை தூறிச் சென்றது. ஊட்டியில் சமீப நாட்களாகக் காலை நேரங்களில் பனிப்பொழிவு இருந்து வந்த நிலையில், மதிய நேரங்களில் வெயில் அடித்து வந்தது. இந்நிலையில் இன்று மதிய வேளையில் சாரல் மழை பொழிந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்தபடி மலையரசியின் அழகைச் சுற்றிப்பார்த்து ரசித்தனர். மேலும் ஊட்டியில் பெரும்பாலான விவசாய நிலங்களிலும் கேரட், பீட்ரூட், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றைப் பயிரிட்டுள்ள விவசாயிகளும் இந்த மிதமான சாரல் மழையினால் மகிழ்ச்சி அடைந்தனர். விளம்பரம் இதையும் படிங்க: பந்தக்கால் நாட்டுடன் துவங்கியது திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா… மகாதீபம் தேதி தெரியுமா..? இந்த திடீர் சாரல் மழையால் சலைகளில் பலரும் கைகளில் குடை இன்றி நனைந்து சென்றனர். குளுகுளு சூழலை அனுபவிக்க ஊட்டிக்கு வரும் மக்களை மகிழ்விக்கும் வகையில் பெய்த இந்த மழையால் ஊட்டியின் மண்ணும் குளிர்ந்துள்ளது. மலை மாவட்டத்தில் மழை விட்ட பிறகு இயற்கையான அழகு பிரமிக்க வைக்கும் அளவில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் விரும்பி புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty , Weather News in Tamil First Published : September 23, 2024, 7:59 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.