RAMANATHAPURAM

மிடுக்காக நடந்து வந்த ராமநாதசுவாமி கோவில் யானை... முகம் முழுவதும் மஞ்சள் பூசி மலர்கள் அலங்காரத்தில் காட்சி...

முகம் முழுவதும் மஞ்சள் பூசி வீதியுலா வந்த ராமநாதசுவாமி கோவில் யானை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் ஆடித்திருவிழா 15-நாள் நிகழ்ச்சியினை முன்னிட்டு சுவாமி - அம்பாள் மஞ்சள் நீராடலில் ஏகசிம்ம வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலத்தில் முகம் முழுவதும் மஞ்சள் பூசி சிறப்பு மலர் அலங்காரத்தில் ஒய்யாரா நடைபோட்டு வீதியுலா வந்து கோவில் யானை ராமலெட்சுமி. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா மற்றும் மாசி திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் ஆடித்திருவிழாவானது 17 நாட்கள் நடைபெறுவது ஐதீகமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஜூலை 29-ம் தேதி கொடியேற்றி தொடங்கி பர்வதவர்த்தினி அம்பாள் காலை, மாலை வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுவாமி- அம்பாளுக்கு திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், 15-ம் நாள் திருவிழா மஞ்சள் நீராடலை முன்னிட்டு சுவாமி - அம்பாள் பிரியாவிடை பெற்று ஏகசிம்ம வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் கோவிலின் யானை ராமலெட்சுமி முகம் முழுவதும் மஞ்சள் பூசி, சிவலிங்கம் உருவத்தில் செய்யப்பட்ட சிறப்பு மலர் அலங்காரத்தில் ஒய்யாரமாக தலைமை தாங்கி மிடுக்காக நடந்து வந்ததை,சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / மிடுக்காக நடந்து வந்த ராமநாதசுவாமி கோவில் யானை... முகம் முழுவதும் மஞ்சள் பூசி மலர்கள் அலங்காரத்தில் காட்சி... மிடுக்காக நடந்து வந்த ராமநாதசுவாமி கோவில் யானை... முகம் முழுவதும் மஞ்சள் பூசி மலர்கள் அலங்காரத்தில் காட்சி... முகம் முழுவதும் மஞ்சள் பூசி வீதியுலா வந்த ராமநாதசுவாமி கோவில் யானை aadi thiruvizha | ராமநாதசுவாமி கோவிலின் ஆடித்திருவிழா 15-நாள் நிகழ்ச்சியினை முன்னிட்டு உடல் முழுவதும் மஞ்சள் பூசி சிறப்பு மலர் அலங்காரத்தில் ஒய்யாரா நடைபோட்டு வீதியுலா வந்து கோவில் யானை ராமலெட்சுமி படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : August 13, 2024, 11:23 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் ஆடித்திருவிழா 15-நாள் நிகழ்ச்சியினை முன்னிட்டு சுவாமி - அம்பாள் மஞ்சள் நீராடலில் ஏகசிம்ம வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலத்தில் முகம் முழுவதும் மஞ்சள் பூசி சிறப்பு மலர் அலங்காரத்தில் ஒய்யாரா நடைபோட்டு வீதியுலா வந்து கோவில் யானை ராமலெட்சுமி. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா மற்றும் மாசி திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் ஆடித்திருவிழாவானது 17 நாட்கள் நடைபெறுவது ஐதீகமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஜூலை 29-ம் தேதி கொடியேற்றி தொடங்கி பர்வதவர்த்தினி அம்பாள் காலை, மாலை வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுவாமி- அம்பாளுக்கு திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்று முடிந்தது. விளம்பரம் இந்நிலையில், 15-ம் நாள் திருவிழா மஞ்சள் நீராடலை முன்னிட்டு சுவாமி - அம்பாள் பிரியாவிடை பெற்று ஏகசிம்ம வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் கோவிலின் யானை ராமலெட்சுமி முகம் முழுவதும் மஞ்சள் பூசி, சிவலிங்கம் உருவத்தில் செய்யப்பட்ட சிறப்பு மலர் அலங்காரத்தில் ஒய்யாரமாக தலைமை தாங்கி மிடுக்காக நடந்து வந்ததை,சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Hindu Temple , Local News , Rameshwaram First Published : August 13, 2024, 11:23 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.