RAMANATHAPURAM

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இலங்கை அருகில் உருவாகும் காற்றழுத்த சுழற்சி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழைபெய்து ஜந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தததால் கடந்த மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்தது. இதுபோன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் இரண்டு மாதங்களுக்கு பிறகு கடந்த வாரம் அனைத்து தாலுகா பகுதியிலும் நல்ல மழை பொழிவு இருந்தது. குறிப்பாக கமுதி, முதுகுளத்தூர் பகுதியில் இரண்டு நாட்கள் நல்ல கனமழை பெய்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியினை அளித்தது. இந்நிலையில், இலங்கை அருகே உருவாகும் காற்று சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்தில் இடி, மின்னல் மற்றும் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தகாற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜந்து நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை குறைந்து 30 டிகிரி செல்சியஸ் முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் ஜந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Ramanathapuram,Tamil Nadu Last Updated : August 11, 2024, 12:17 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் இலங்கை அருகில் உருவாகும் காற்றழுத்த சுழற்சி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழைபெய்து ஜந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தததால் கடந்த மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்தது. இதுபோன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் இரண்டு மாதங்களுக்கு பிறகு கடந்த வாரம் அனைத்து தாலுகா பகுதியிலும் நல்ல மழை பொழிவு இருந்தது. குறிப்பாக கமுதி, முதுகுளத்தூர் பகுதியில் இரண்டு நாட்கள் நல்ல கனமழை பெய்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியினை அளித்தது. விளம்பரம் இந்நிலையில், இலங்கை அருகே உருவாகும் காற்று சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்தில் இடி, மின்னல் மற்றும் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தகாற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜந்து நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை குறைந்து 30 டிகிரி செல்சியஸ் முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News , Ramanathapuram First Published : August 11, 2024, 12:17 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.