தனுஷ்கோடியில் வலசைக்கு வரும் பறவைகள் பார்க்க புதிய முயற்சி.. தனுஷ்கோடி முகுந்தராயன் சத்திரத்தில் பருவ மழைக்குப்பின் வலசைக்கு வரும் பறவைகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி கூடாரம் தனுஷ்கோடியில் புதிய சுற்றுலா இடமாக உருவாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் உள்ள புயலால் பாதிக்கப்பட்டு நினைவு சின்னங்களாக உள்ள இடத்தையும், மன்னார் வளைகுடாவில் இருந்து வரும் குளிர்ந்த காற்று கடலின் இயற்கையின் அழகினை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு கோதண்டராமர் கோவில் முதல் அரிச்சல்முனை வரையில் 15 கிலோமீட்டருக்கு இருக்கும் சதுப்பு நிலங்கள் மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து நாரை வகை, கொக்கு வகை, ஆலா வகை, உள்ளான் வகை, நீர்க்காகம், ப்ளமிங்கோ, போன்ற 50-க்கும் அதிகமான பறவை இனங்கள் வந்து செல்லும். தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பறவைகளையும் காண ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் தொலைவில் உள்ள நிலப்பகுதி மற்றும் மரங்களில் இதனை எளிதாக காண முடியாது. இந்நிலையில், சீசன் நேரத்தில் முகுந்தராயன் சத்திரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாங்காரோவ் மரங்களில் வலசைக்கு வரும் பறவைகளை காண மரப்பாலத்துடன் கூடாரம் அமைத்து இதில் இரண்டு தொலைநோக்கிகள் வைத்து பறவைகள் காணவும், மாங்குரோவ் காடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அமைத்து இன்று முதல் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதையும் வாசிக்க:Garbage Bank: குப்பைக்கென ஒரு வங்கியா… செம ஐடியாவா இருக்கே… தற்போது, சீசன் இல்லாததால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி உள்ளது. பருவமழை காலங்களில் பறவைகளை குவிந்த பிறகு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்லலாம். மேலும், இயங்கும் நேரம் மற்றும் அனுமதி கட்டணங்கள் குறித்த விவரங்கள் விரைவில் முடிவெடுத்து அமல்படுத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None
Popular Tags:
Share This Post:
New Pamban Bridge: மாத இறுதியில் திறப்பு விழா... தெற்கு ரயில்வே அதிகாரி கொடுத்த செம்ம அப்டேட்...
October 15, 2024ஏவுகணை நாயகனின் பிறந்தநாள்... நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தும் சுற்றுலா பயணிகள்...
October 15, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- September 29, 2024
-
- September 22, 2024
-
- September 22, 2024
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி... துள்ளி குதித்து விளையாடிய காளைகள்...
- By Sarkai Info
- September 20, 2024
Featured News
ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு
- By Sarkai Info
- August 25, 2024
Latest From This Week
TN Rain Update: அதிகாலை முதல் கொட்டி தீர்த்த கனமழை... குளுகுளு வென மாறிய வானிலை...
RAMANATHAPURAM
- by Sarkai Info
- August 21, 2024
30 ஆண்டு கனவு நிறைவேறி விட்டது... மகிழ்ச்சியில் திக்கு முக்காடும் மீனவர்கள்...
RAMANATHAPURAM
- by Sarkai Info
- August 21, 2024
வெளுத்து வாங்கப்போகும் மழை... 16 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை...
RAMANATHAPURAM
- by Sarkai Info
- August 17, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.