RAMANATHAPURAM

30 ஆண்டு கனவு நிறைவேறி விட்டது... மகிழ்ச்சியில் திக்கு முக்காடும் மீனவர்கள்...

T- வடிவில் துறைமுக பாலம் திறப்பு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5,000-ற்கும் அதிகமான மீனவர்கள் நெடுந்தீவு பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு 30 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட துறைமுக பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அரசு சார்பில் ரூ.22 கோடி செலவில் T- வடிவில் துறைமுக பாலம் அமைக்கும் பணி இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால் இன்று மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி துவக்கினார். ராமேஸ்வரத்தில் 50 ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட துறைமுக பாலம் முற்றிலும் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால் நீண்ட காலமாக புதிதாக பாலம் அமைக்க கோரிக்கை வைத்தோம். இதனால் தமிழக அரசு சார்பில் ரூ.22 கோடி செலவில் துறைமுகப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும், படகுகளில் இருந்து மீன்களை இறக்கவும் உதவியாக இருக்கும். பாலம் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் இரவில் வலை போன்ற மீன்பிடி உபகரணங்கள் திருடுபோவதை தடுக்க முடியும். இதையும் வாசிக்க: தபால் சேமிப்பில் அதிக வட்டி!! பெண்களுக்கு மட்டுமான ஸ்பெஷல் திட்டம் பற்றி தெரியுமா? மேலும், மீன்களை விற்பனை செய்யும் மீனவர்கள் 12 நபர்களுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் மீன்கள் வைக்கும் ஐஸ் பெட்டிகளும் வழங்கியதாக மீனவர் சகாயம் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / 30 ஆண்டு கனவு நிறைவேறி விட்டது... மகிழ்ச்சியில் திக்கு முக்காடும் மீனவர்கள்... 30 ஆண்டு கனவு நிறைவேறி விட்டது... மகிழ்ச்சியில் திக்கு முக்காடும் மீனவர்கள்... T- வடிவில் துறைமுக பாலம் திறப்பு Rameswaram Fishing Harbour | ராமேஸ்வரத்தில் 50 ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட துறைமுக பாலம் முற்றிலும் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால் நீண்ட காலமாக புதிதாக பாலம் அமைக்க கோரிக்கை. படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : August 21, 2024, 3:10 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5,000-ற்கும் அதிகமான மீனவர்கள் நெடுந்தீவு பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு 30 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட துறைமுக பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அரசு சார்பில் ரூ.22 கோடி செலவில் T- வடிவில் துறைமுக பாலம் அமைக்கும் பணி இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால் இன்று மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி துவக்கினார். ராமேஸ்வரத்தில் 50 ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட துறைமுக பாலம் முற்றிலும் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால் நீண்ட காலமாக புதிதாக பாலம் அமைக்க கோரிக்கை வைத்தோம். விளம்பரம் இதனால் தமிழக அரசு சார்பில் ரூ.22 கோடி செலவில் துறைமுகப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும், படகுகளில் இருந்து மீன்களை இறக்கவும் உதவியாக இருக்கும். பாலம் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் இரவில் வலை போன்ற மீன்பிடி உபகரணங்கள் திருடுபோவதை தடுக்க முடியும். இதையும் வாசிக்க: தபால் சேமிப்பில் அதிக வட்டி!! பெண்களுக்கு மட்டுமான ஸ்பெஷல் திட்டம் பற்றி தெரியுமா? மேலும், மீன்களை விற்பனை செய்யும் மீனவர்கள் 12 நபர்களுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் மீன்கள் வைக்கும் ஐஸ் பெட்டிகளும் வழங்கியதாக மீனவர் சகாயம் தெரிவித்தார். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: fisherman , Local News First Published : August 21, 2024, 3:10 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.