RAMANATHAPURAM

மழைக்கு நோ சான்ஸ்... இருந்தாலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை... என்ன காரணம் தெரியுமா..?

மீனவர்களுக்கு எச்சரிக்கை ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பில்லாமல் வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும், மன்னார் வளைகுடா கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. தென்மேற்கு பருவமழைக்கு பிறகு தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து வெயில் கோடை வெயிலைப்போல் அடித்து வருகிறது. சில இடங்களில் 100 பாரன்ஹீடிற்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் இம்மாதத்தில் இருந்து சிறிய தூரல் மழை கூட இல்லாமல் வெப்பநிலை இரண்டு, மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து வெப்பநிலை கடுமையான பொதுமக்களை வாட்டி வதக்கி வருகிறது. இந்நிலையில், அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரக்கூடிய வாரத்தில் மழைக்கு எதுவும் வாய்ப்பில்லை, வெப்பநிலை அதிகப்பட்சமாக 32 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையும் வாசிக்க: மாதம் ₹1.4 லட்சம் வரை சம்பாதிக்கலாம்… பி.இ,பி.டெக் பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்… ராமநாதபுரம் மாவட்டத்தினை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் இப்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக உபகரணங்கள் எடுத்துக் கொண்டு மீன்பிடிக்க செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / மழைக்கு நோ சான்ஸ்... இருந்தாலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை... என்ன காரணம் தெரியுமா..? மழைக்கு நோ சான்ஸ்... இருந்தாலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை... என்ன காரணம் தெரியுமா..? மீனவர்களுக்கு எச்சரிக்கை Weather Forecast | வரக்கூடிய வாரத்தில் மழைக்கு எதுவும் வாய்ப்பில்லை, வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : September 22, 2024, 9:00 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பில்லாமல் வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும், மன்னார் வளைகுடா கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. தென்மேற்கு பருவமழைக்கு பிறகு தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து வெயில் கோடை வெயிலைப்போல் அடித்து வருகிறது. சில இடங்களில் 100 பாரன்ஹீடிற்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் இம்மாதத்தில் இருந்து சிறிய தூரல் மழை கூட இல்லாமல் வெப்பநிலை இரண்டு, மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து வெப்பநிலை கடுமையான பொதுமக்களை வாட்டி வதக்கி வருகிறது. விளம்பரம் இந்நிலையில், அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரக்கூடிய வாரத்தில் மழைக்கு எதுவும் வாய்ப்பில்லை, வெப்பநிலை அதிகப்பட்சமாக 32 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையும் வாசிக்க: மாதம் ₹1.4 லட்சம் வரை சம்பாதிக்கலாம்… பி.இ,பி.டெக் பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்… ராமநாதபுரம் மாவட்டத்தினை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் இப்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக உபகரணங்கள் எடுத்துக் கொண்டு மீன்பிடிக்க செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Fishermen , Local News , Ramanathapuram , Weather Update First Published : September 22, 2024, 9:00 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.