RAMANATHAPURAM

தொல்லியல் துறையின் கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி... ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்...

தொல்லியல் துறையின் கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி திருவாடானை அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டு எழுத்துக்களை படிக்கும் பயிற்சியானது நடைபெற்றது. இதில் தொல்லியல் துறை ஆய்வாளர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வரலாற்று சிறப்புமிக்கஸ்தலமாக ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட பாண்டிய ஸ்தலங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் இன்று திருவாடானை அரசு கல்லூரியில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு தொன்மை பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு, கல்வெட்டுகளை படி எடுத்து படிக்கும் பயிற்சியானது அளிக்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் பழனியப்பன் தலைமை தாங்கினார். கல்வெட்டுகளில் உள்ள தொன்மையான எழுத்துக்களை படிப்பது, படி எடுத்து வட்ட எழுத்துக்கள் படிப்பது, படி எடுத்து தொல்லியல் பொருட்களை பாதுகாப்பது பற்றி தொல்லியல் துறை ஆய்வாளர் காளிதாஸ்அனைவருக்கும் பயிற்சி அளித்தார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / தொல்லியல் துறையின் கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி... ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்... தொல்லியல் துறையின் கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி... ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்... தொல்லியல் துறையின் கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி Epigraphy Training| அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வெட்டு எழுத்துக்களை படிக்கும் பயிற்சியானது நடைபெற்றது. படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : October 5, 2024, 7:19 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் திருவாடானை அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டு எழுத்துக்களை படிக்கும் பயிற்சியானது நடைபெற்றது. இதில் தொல்லியல் துறை ஆய்வாளர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வரலாற்று சிறப்புமிக்கஸ்தலமாக ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட பாண்டிய ஸ்தலங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் இன்று திருவாடானை அரசு கல்லூரியில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு தொன்மை பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு, கல்வெட்டுகளை படி எடுத்து படிக்கும் பயிற்சியானது அளிக்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் பழனியப்பன் தலைமை தாங்கினார். விளம்பரம் கல்வெட்டுகளில் உள்ள தொன்மையான எழுத்துக்களை படிப்பது, படி எடுத்து வட்ட எழுத்துக்கள் படிப்பது, படி எடுத்து தொல்லியல் பொருட்களை பாதுகாப்பது பற்றி தொல்லியல் துறை ஆய்வாளர் காளிதாஸ்அனைவருக்கும் பயிற்சி அளித்தார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Archaeology , Local News First Published : October 5, 2024, 5:04 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.