RAMANATHAPURAM

தமிழகத்தில் இனி மழை தான்... வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்...

ராமநாதபுரம் வானிலை ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த வாரத்திலிருந்து படிப்படியாக வெப்பநிலை குறைந்து மழை பெய்ய ஆரம்பித்து மழைக்காலம் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை மழைக்குப் பின்பு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் பல்வேறு மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதம் வரையிலும் நன்றாக மழை பெய்தது. செப்டம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து கோடை வெயில் அடிப்பது போன்று வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வெயில் அடித்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக வட மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 28) பரமக்குடி, கமுதி போன்ற இடங்களில் சாரல் மழை பெய்தது. சில இடங்களில் மேக மூட்டமாக வானம் காட்சி அளித்தது. இதையும் படிங்க: நீலகிரியில் துவங்கியது மழை…. சுற்றுலா பயணிகளை வரவேற்க வருண பகவான் அளித்த கருணை மழை… இந்நிலையில், காற்றின் திசை மாறுபட்டு வடகிழக்கு திசையில் காற்று வீசத்துவங்கி, வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க உள்ளது. மேலும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்தமிழகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் வாரத்தில் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகப்பட்சமாக 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழகத்தில் இனி மழை தான்... வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்... தமிழகத்தில் இனி மழை தான்... வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்... ராமநாதபுரம் வானிலை வடகிழக்கு பருவமழை சீசன் துவங்க உள்ளது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : September 29, 2024, 8:45 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த வாரத்திலிருந்து படிப்படியாக வெப்பநிலை குறைந்து மழை பெய்ய ஆரம்பித்து மழைக்காலம் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை மழைக்குப் பின்பு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் பல்வேறு மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதம் வரையிலும் நன்றாக மழை பெய்தது. செப்டம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து கோடை வெயில் அடிப்பது போன்று வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வெயில் அடித்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக வட மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 28) பரமக்குடி, கமுதி போன்ற இடங்களில் சாரல் மழை பெய்தது. சில இடங்களில் மேக மூட்டமாக வானம் காட்சி அளித்தது. விளம்பரம் இதையும் படிங்க: நீலகிரியில் துவங்கியது மழை…. சுற்றுலா பயணிகளை வரவேற்க வருண பகவான் அளித்த கருணை மழை… இந்நிலையில், காற்றின் திசை மாறுபட்டு வடகிழக்கு திசையில் காற்று வீசத்துவங்கி, வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க உள்ளது. மேலும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்தமிழகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் வாரத்தில் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகப்பட்சமாக 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Ramanathapuram , Weather News in Tamil First Published : September 29, 2024, 8:45 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.